Search This Blog

May 27, 2018

பிரதோஷப் பாடல்- 7

பிரதோஷப் பாடல்- 7

இன்றைய பிரதோஷப்பாடலை இறைவன் அடிகளிலே படைக்கிறேன் - அதை பற்றிய கதைச் சுருக்கத்தோடு !

அன்புடன்

ரமேஷ்



அரிமாவுக்  கஞ்சியதால் மரமேறிய வேடனுமே 
இரவுறக்கம் துறந்திடவே விலுவத்தின் இலைபறித்து 
தருவினடி அரன்சிலைமேல் எறிந்தேநல்  அபிடேகம் 
கருதாமல் செய்தாலும் கைலாயம் சென்றடைந்தான். 


A hunter chased by a lion, climbed up a vilva tree to escape from it. Unable to  come down as the lion kept vigil under the tree waiting for him to come down, the hunter, to prevent himself 
from dozing off and falling  down from the tree , started plucking the leaves from the tree and was dropping them down. There was a Sivalingam under the tree and the vilva leaves kept falling on them! As a result, though the 'Abhishekam / Archanai " was performed by the hunter, without his really meaning to do so, yet he attained Moksha . 

சிங்கம் ஒன்று துரத்தியதால் பயந்தோடிய வேடன் ஒருவன், அதனிடமிருந்து தப்ப ஒரு  வில்வ மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொண்டான். சிங்கமோ, அவன் இறங்கி வருவான் என்று எதிர்பார்த்து மரந்தடியிலே காத்திருந்தது. இரவில் தூங்கிவிட்டால் கீழே  விழுந்து சிங்கத்திற்கு இரையாகிவிடுமோவென அஞ்சிய வேடன், தான் உறங்காது நேரம் கழிக்க  , மரத்தின் இலைகளைப்  பறித்து கீழே போட்டவாறு இரவைக் கழித்தான். அந்த வில்வ இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தவாறு இருந்தன! இவ்வாறு, தன்னை அறியாமலே செய்த அர்ச்சனையின் பயனாக, அவ்வேடன் கைலாயம் சென்றடைந்தான்.

May 11, 2018

வேகத் தடைகள்

வேகத் தடைகள்

இது நான் கண்ட ஒரு புதுவிதமான வேகத் தடை!
நடந்து செல்வோரையும் நிறுத்தி, அவர்களை கடக்க விடாமல் செய்யும்  மஞ்சள் மலர்களால் ஆன வேகத் தடை.
படித்துப் பாருங்களேன்!
அன்புடன் 
ரமேஷ் 


வேகத் தடைகள்







தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில்  உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில்  விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்

கருத்த சாலைப்  பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய  மென்மலர்ப்  போர்வை

இவை

விதிக்கப் பட்ட ஆயுள் முடிந்து
முதிர்ந்து முற்றும் மரித்த பின்னாலே
உதிர்ந்து கீழே விழுந்து  சாலையில் 
சிதறிக்  கிடைக்கும் சடல மலர்களோ?

இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம்
பதுங்கி அவற்றுள் புதைந்து இருக்குமோ?
பாதம் அவைமேல் பதித்து நடந்தால்
வேதனை யுற்று வலியால் வெதிர்க்குமோ?

பதித்துக் காலை பூமேல் வைத்து 
மிதித்து வதைக்க  மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!



வெதிர்த்தல் = நடுங்குதல்


May 5, 2018

எவரும் செய்யாத ஊழல்கள் ( அல்லது ) எல்லாம் அவன் செயல்!

எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

நாட்டில் நடக்கும் ஊழல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. 1950 முதல் 1980 க்கு உட்பட்ட 30 ஆண்டுகளில்  நடந்த  பெரிய அளவு ஊழல்கள் மொத்தம் 11. ( போபோர்ஸ் உட்பட). இந்த பெரிய அளவு ஊழல்கள்,  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக , 1990 முதல் 2000 வரையிலான  10  ஆண்டுகளில் 18 ஆகவும் , 2000 முதல் -2010வரையிலான 10  ஆண்டுகளில் 29 என வளர்ந்து 2010-2018 க்கான 8 ஆண்டு கால அளவில் 138 ஆக உயர்ந்திருக்கிறது. 
இதில் வருந்தத்தக்க விஷயம், ஊழல்கள் நடந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும்,  பெரும்பான்மையான ஊழல்களில் யார் செய்தது என்று இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை! வரும் நாட்களிலும் இது நிரூபணம் செய்யப்படும் என்றும் நம்புவ தற்கு முடியவில்லை. 
எவரும் செய்யாத , ஆனால் நடந்த, ஊழல்கள் இவை! 
நடக்கும் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணம் என்று நாம் நம்புவதைப்போல , இவற்றிற்கும்  இவன் மேலேயே பழியைப் போட்டுவிட்டு , அடுத்து வரப்போகும் ஊழல்களை பற்றி அலசவேண்டியதுதான்! 

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

டூஜீ  கேசில் ஊழல் ஆனால் 
மாஜி மந்திரி செய்யவில்லை 
ஊரே அறிந்த பீரங்கி ஊழல் 
யார்செய்  தாரதை ?  தெரியவில்லை 

கார்கில் போரின் தியாகி களுக்கு 
சேர வேண்டிய வீடுகளும் 
யார் யாருக்கோ சேர்ந்தது ஆனால் 
யாரும் குற்றம் செய்யவில்லை! 

நிலக்கரி ஊழல்  உண்மை ஆனால் 
தலைவர்கள் தவறெதும் செய்யவில்லை.
காமன் வெல்த்விளை யாட்டுக் கணக்கில் 
ஏமாற் றியவர் யாருமில்லை!

கல்லறைப் பெட்டி ஊழலில் எவரும் 
சில்லறை ஒன்றும்  வாங்கவில்லை.
கனிமம் எடுப்பதில் ஊழல்,  உண்மை ; 
எனினும் எவரும் செய்யவில்லை !

கல் எடுக்கும் ஊழலில் எவரின் 
கல்லாப் பெட்டியும் ரொம்பவில்லை!
நதியடி  மணலும் காணாய்ப் போச்சு, 
சதிகாரர் அதில் எவருமில்லை ! 

வங்கியில் பெரும்பணம் வாங்கிய வர்கள்  
இங்கே எங்கும் தங்காமல் 
இங்கிலாந் ஹாங்காங் ஓடிச் சென்றால் 
எவரைச்   சாடி  என்னபயன்?

ஊழல் என்னும் ஆழல்*நம்  நாட்டை 
அரித்து பாழாய்ச் செய்கிறதே!
விழலுக் கிறைத்த நீர்போல் மக்கள் 
வரிப் பணங்களும் போகிறதே !

ஊழல் எல்லாம் நடந்தது உண்மை 
ஆனால் செய்தவர் யாருமில்லை 
பாழாய்ப் போன ஊழின் செயலிவ் 
வூழல்க ளென்றே  உணர்ந்துவிடு 

நினைத்ததைப் பார்த்து நாளும் வருந்தி 
நடக்கப் போவது ஒன்றுமில்லை 
அனைத்து மவன்செயல் நாமென் செய்வோம் 
நாட்டின் ஜாதகம் சரியில்லை!





ஆழல் - கறையான்


Apr 27, 2018

பிரதோஷப் பாடல்- 6

பிரதோஷப் பாடல்- 6

இன்றைய பிரதோஷத்தன்று பிரதோஷத்தைப் பற்றிய கதையுடன் ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்

The Story In English


The Devas and Asuraas were churning the Ocean of Milk, using Mount Meru as the stick  and the snake Vasuki as the rope . At that time , the snake Vasuki spit out a venom called Aalam and another venom known as the Kaalam rose from the milky ocean . These combined to produce the dreaded AalaKaala venom.  Fearing the venom, the Devas ran to Mount Kailash and prayed to Lord Siva. Lord Siva took pity on them and drank the venom  and  thus saved them and the universe. To prevent the  highly potent poison form getting swallowed, Devi Parvathi held the throat of Siva and made the venom stay there, thus resulting in the blue colour of Lord Sivas throat. Due to the after effects of the Aalakaala poison, Lord Siva became tired and resting on Parvathi's lap, slept for a day. This happened on a Dwadasi day. The next day, on Thrayothasi the Lord woke up at Pradosham hour and performed the Thandavam dance . 

பாடல் :

அரவின்வாய் விடுத்த ஆலம் கடலினின் றெழுந்த காலம் 
இருவிடம்  சேர்ந்து திரண்ட கருநீல ஆல காலம் 
அருந்தியே அண்டம் காத்து அயர்ந்தோர்நாள் உறங்கிப் பின்னர்    
திரயோதசிப் பிரதோஷ நேரம் திருநடம் புரிந்தான் மாதோ!

Apr 24, 2018

திருவிளையாடல் பாடல் 11 - உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம்


திருவிளையாடல் பாடல் 11 -  உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம் 










பாடல் :

சுந்தரர்  செங்கோல் ஆட்சியின் பின்னரும் சந்ததி தொடர்ந்து தழைக்க
கந்தனே  தடாதகை அன்னையின் கருவிலே மகனாய்  உருவ  மெடுத்து
வந்து பிறந்து  உக்கிர வர்மன்  என்றதோர்   பெயரை ஏற்று
தந்தைதாய் மகிழ்ந்திட   தரணியோர் வியந்திட   பலகலை கற்றுத்                                                                                                                                           தேர்ந்தான்   
  


பாடல் பொருள் :

சோமசுந்தரனாருடைய நெறிதவறாத செங்கோல் ஆட்சிக்ருட்டு, தடாதகைப் பிராட்டியார் திருவயிற்றில், கந்தப்பெருமானே மகனாய் உருவெடுத்தார். அவ்வாறு பிறந்த குழந்தைக்கு, உக்கிரவர்மன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.  உக்கிரவர்மனும் சிறுவயதிலேயே,  பெற்றோர் மகிழவும், மற்றோர் வியக்கவும் , பல்வேறு கலைகளும் பயின்று தேர்ச்சி பெற்றான்.

The story in Tamil :

சோமசுந்தர பாண்டியனாகவும் , அன்னை தடாதகைப் பிராட்டியாகவும் உருவெடுத்த சிவபெருமானும், அன்னை மீனாட்சியும், மக்கள் மகிழ்வுறும் விதமாக செங்கோலோச்சி  அருள் புரிந்து வந்தனர்.  இப்பாண்டிய குலம் தழைத்தோங்கவும்,  மக்கள் தொடர்ந்து நல்லாட்சி பெறவும் விழைந்த சிவபெருமானின் திருவுளப்படி , கந்தபிரானே தடாதகைப் பிராட்டியின் கருவில் மகனாக உருவெடுத்து அவதரித்தார். முருகப்பெருமானே அவதாரம் செய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இச்சிறுவன் பிற்காலத்தில், வருணன், இந்திரன், மேரு என்ற மலையரசன் என்ற மூவரையும் கூட   கண்டவுடன் நடுங்கச் செய்யும்  வீரனாக விளங்குவான் என்பதால், அவனுக்கு உக்கிர வர்மன்  என்று பெயர் சூட்டினர். வேதநெறிப்படி செய்யவேண்டிய கிரியைகளை முடித்து, வியாழ பகவானையே குருவாகப் பெற்று வேதங்களிலும் , பல்வேறு கலைகளிலும் தேர்ச்சி பெற்றான்  உக்கிர சிம்மன். விற்போர், மற்போர், வாள்போர், யானையேற்றம், குதிரை ஏற்றம், தேரோட்டுதல் என்ற பல கலைகளிலும் வல்லுனன் ஆனான்.


The Story in Eglish :

Lord Shiva and Goddess Meenakshi , in the form of King Somasundara Pandiyan and Queen Thadaathagai were ruling the Pandya Kingdom and were showering their blessings on the subjects of the Kingdom. In order that this Pandya dynasty continuous to provide good governance to the subjects of the kingdom, Lord Siva willed for Lord Muruga to take birth as their son. As willed, Queen Thadaathagai  gave birth to a male child , who was none other than Lord Muruga himself. This event gave  great joy to the  subjects of the Pandya Kingdom. The child , who with his prowess, was destined to earn the respects of Varuna, ( King of Rains) ,  Indira ( King of Devas) and Meru ( King of mountains) was named Ukkaira Varman.  Ukkirvarman learnt the Vedas and various other scriptures under the direct tutelage of Vyaazha Bhagavaan. He also became expert in various martial arts like archery, sword fighting,  wrestling  and skills like horse riding, elephant riding and riding of chariots . 


Apr 18, 2018

உண்ணா விரதங்கள்


உண்ணா விரதங்கள் 

சமீப காலத்தில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருப்பது என்பது அரசியல்வாதிகளுக்குப் பழக்கமாகிவிட்டது. மக்களுக்காக தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, பெருந்தலைவர்கள் சென்ற காலங்களில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது போய், இப்போது  காலையில் ஆரம்பித்து மாலை வரையில், ஏன், மதியம் வரையும் கூட உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இம்மாதிரியான போன்சாய் உண்ணாவிரதம் கூட இருக்க முடியாமல் , ஆரம்பத்திலும்,  நடு நடுவேயும், இவர்கள் சாப்பிடுவது அமபலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. சமீபத்தில் நடந்த சில உண்ணாவிரதக் கூத்துகள் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்.

உண்ணா விரதங்கள் 








ராஜ கட்டின்* முன்னாலே                 * RajGhat in Delhi
-----சாதிப்  பிரிவைக் கண்டித்து
போஜனம் துறந்து சிலமணிகள்
-----போராட் டங்கள் செய்யுமுன்னே

காலை ஒன்பது மணியளவில்
-----சாலை யோரக்  கடையொன்றில்
சோலா பதுரா* சாப்பிட்டு              * Chole Bathura
-----மாலை வரையில் உண்ணா விரதம்

காவிரி நதிநீர் இல்லாமல்
-----பயிர்களும் உயிர்களும் வாடுவதால்
சாவினை நோக்கிடும் உழவர்க்காய்
-----வாரியம் அமைக்கக் கோரியிவர் 

வள்ளுவர் கோட்ட வளாகத்தில்
-----பட்டினிப்  போரை நடத்துகையில்
கள்ளத் தனமாய் திரைக்குப் பின்
-----பிரிப்பார் பிரியாணி பொட்டலத்தை .

உண்ணா விரதம் இருக்குமிவர்
-----மக்கள் நலன்பற்றி எப்போதும்
எண்ணா விரதம் எடுத்தவராம்
-----இவர்களை நம்பி ஏது பயன் ?

கடைகளை அடையெனக் கோஷமிட்டு
-----கல்லெறி வல்லவ ரானஇவர்  - தன்
வயிறை அடக்க முடியலையே - அவர்
-----வாயைநாம் அடைப்பது எப்போது?

Apr 14, 2018

விளம்பி வருட வாழ்த்துக்கள்

புத்தாண்டு விளம்பி வருட வாழ்த்துக்கள் 

ஹேவிளம்பி ஆண்டு முடிந்து , இன்று விளம்பி ஆண்டு ஆரம்பம்.

இது அறுபது வருடங்கள் கொண்ட  தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில், முப்பத்தி இரண்டாம் ஆண்டு!

இந்த நாளன்று அனைவரும் இன்புற்று இருக்க இறைவனை வணங்கி ஒரு பாடல்.


அன்புடன்
ரமேஷ்





ஹேவிளம்பி ஆண்டு  நிறைந்து 
-----விளம்பியும்  கிளம்பும் இந்நாள் 
தீவினை அனைத்து மகன்று 
-----நல்வினை நாளும் நிறைய  
காவிரியில் நீரும் பெருகி 
------ஆவரித் தந்நதி* ஓடி 
மூவகை போகம் பயிர்கள் 
-----விதைத்துநல்  அறுவடை செய்ய 
ஆவினம் ஆடவர் பெண்டிர் 
-----யாவர்க்கும் இன்பம் சிறக்க 
துயர்களும் துன்பமும் நம்மை 
------தீண்டாது தூரம் ஓட
கூவிளத் தருவடி அமர்வோன்* *
-----சேவடி போற்றி நானோர் 
பாவினை விளம்பிப் பணிந்து
----- போற்றியே வேண்டு கின்றேனே !


ஆவரித் தந்நதி -= ஆவரித்து அந்நதி 
   ஆவரித்து = ஆரவார ஒலியுடன் 
** கூவிளத்தரு= வில்வ மரம்  
     கூவிளத் தருவடி அமர்வோன் --= வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும்                 சிவபெருமான்