Search This Blog

Showing posts with label kural melvaippu venbaa. Show all posts
Showing posts with label kural melvaippu venbaa. Show all posts

Sep 16, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 25

 குறள் மேல்வைப்பு வெண்பா - 25

கொங்கணவர் ஒரு சித்தர். போகரின் மாணாக்கர். இவர்  பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணவர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு நீண்ட நாள் தவத்திலிருந்து விழித்தமையால் ஆகாரம் உண்ண ஊருக்குள் வந்து ஒரு வீட்டிற்கு சென்று உணவு கேட்டார். அது அந்த அம்மையார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சையிட வந்ததால்  சினம் கொண்ட கொங்கணர், "என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி கடுங்கோபத்தோடு விழித்துப் பார்த்தார்ஆனால் அந்த அம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. இதுகண்டு கொங்கணவர் திகைப்புற்றார்! .உடனே அந்த அம்மையார் நகைத்து 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!" என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

சிலர் இந்த அம்மையார் திருவள்ளுவரின் மனைவி வாசுகி என்றும் கூறுவது உண்டு.

இது குறித்து ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா! ! இல்லறவியலில் இடம் பெற்ற குறள் எண் 58

அன்புடன்

ரமேஷ்

பின் குறிப்பு
இந்தக் காலத்துக்கு ஒத்துப்போகுமா என்பது கேள்விக்குரியதே!! இருந்தாலும் பதிவிடுகிறேன்!


"கொங்கணவா கொக்கென்று எண்ணினையோ என்னை"யெனத் 

தங்கணவன் சேவையையே முன்வைத்தாள் - மங்கையிவள்.-

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)


குறள் 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

பொருள் 

கணவனைப் போற்றி  கடமையைச் செய்யப் பெற்றால் , மகளிர் பெருஞ்சிறப்பையுடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

English version by Suththaanandha Bharatiyaar

Women who win their husbands' heart
Shall flourish where the gods resort.



Aug 8, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 24

 குறள் மேல்வைப்பு வெண்பா - 24

இரண்டு நாட்களுக்கு முன் இந்திய மங்கை வினீத் போகாத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனை  வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது. தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் செல்வார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் அடுத்த நாளே "அவர் எடை பரிசோதனையில் கேவலம் ஒரு 100 கிராம் அளவு மட்டும் 50 கிலோவை மிஞ்சியதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்" என்ற செய்தி பேரிடியாக வந்தது.

இந்த செய்தி எனக்கு வலியறிதல் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை நினைவு படுத்தியது.

அதன் விளைவாக ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 



 

மயிரளவே   கூடியதால்    தங்கம்   இழந்து   

துயருற்றாள் தோகையாள்  போகாத் - பயிற்பாடம் 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 

சால மிகுத்துப் பெயின்  

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

விளக்கம் : மென்மையான மயிலிறகு தான் என்றாலும், ஒரு சிறிய அளவுகூட, தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறியும் . அதுபோலவே இங்கு 50 கிலோவுக்கு மேலே 100 கிராம் மட்டுமே அதிகம் என்றாலும், (0.2 சதவீதம்) போகாத் பதக்கத்தை இழக்க நேர்ந்தது!  

 


Sep 26, 2023

குறள் மேல்வைப்பு வெண்பா- 23


குறள் மேல்வைப்பு வெண்பா- 23 

சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த ஆசியா கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் பரிசாக 5000 டாலர்களைப் பெற்றார். ஆனால் அப்பணத்தை அவர் அக்கோப்பைக்கான எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாகப் -- குறிப்பாக மழை நாட்களில்-பணியாற்றிய  களப்பணியானர்களுக்கு அளித்து அவர்களைப்  பாராட்டினார். அனைவரையும் நெகிழச் செய்த இந்நிகழ்ச்சி பற்றி ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா.*

அன்புடன் 
ரமேஷ் 

*குறள் மேல்வைப்பு வெண்பா பற்றி ஒரு சிறு குறிப்பு 
Thirukural is called Tamil Vedam. It comprises of 133 chapters, each containing 10 couplets of two lines. This a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it. 
The Kural (short form of Thirukural) has messages for all times. There are stories of many great men, who have lived by these messages. The Kural Melvaippu venbaa is an effort to relate these inspiring stories to the Kural. 
I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural. Also appended is an English version of the Kural, in poetic form, written by Rev.Pope and Suththananda Barathiyaar,


Indian pacer Mohammed Siraj on Sunday donated his player-of-the-match cash prize of USD 5,000 to the Sri Lankan groundstaff who worked tirelessly through the rain-hit Asia Cup.


வெற்றிக்குக் காரணனாய்ப் பெற்றதொரு பொற்கிழியை 

மற்றவர்க் கேயளித்த பெற்றிமையான்* சிர்ராஜன்**.             

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

*பெற்றிமை=பெருமை

**சிர்ராஜன்=சிராஜ் 

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

குறள் எண் 212- அதிகாரம் -ஒப்புரவறிதல் 

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

குறளின் பொருள் :

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.

Rev.Pope's translation

The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

Suthaananda Baarathiyaar's translation

All the wealth that toils give 

Is meant to serve those who deserve

குறள்  மேல்வைப்பு வெண்பா  ( the Kural with a story )

Thirukkural is called Tamil Marai - meaning The Vedas in Tamil Language.
It contains 1330  Kurals.  Each Kural ,  as the name implies, is a small poem , in two lines.

The Kurals have a message for us to follow. There are stories of great men and women who have lived true to these messages.

I have taken a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it.

I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope/ Suththaananda Bharathiyar.




















Apr 2, 2022

குறள் மேல்வைப்பு வெண்பா - 21

குறள் மேல்வைப்பு வெண்பா - 21

Restarting this series after a long, long gap. Hence I think a small recap on the format will be in order.

குறள்  மேல்வைப்பு வெண்பா  ( the Kural with a story )

Thirukkural is called Tamil Marai - meaning The Vedas in Tamil Language.
It contains 1330  Kurals.  Each Kural ,  as the name implies, is a small poem , in two lines.

The Kurals have a message for us to follow. There are stories of great men and women who have lived true to these messages.

I have taken a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it.

I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope/ Suththaananda Bharathiyar.

The Kural this time depicts the plight of the ill advised Russian war against Ukraine.

Read on !

அன்புடன் 

ரமேஷ் 


திருக்குறள்   50-ம் அதிகாரத்தில்  ( இடனறிதல்)  வரும் குறள் இது.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 

உறைநிலத்தோ தொட்டல் அரிது.

இக்குறளின் பொருள் -

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறள்  கொடுத்த இந்த அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் என்பதற்கு ரஷ்ய-உக்ரேனியப் போரின் இன்றைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டு.

இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியார் வார்த்தைகளில் :

To face a foe at home is vain
Though fort and status are not fine.        499

இக்குறளை ஈற்றடிகளாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு பலவிகற்ப இன்னிசை வெண்பா இதோ!



உக்ரேன்மேல் போர்தொடுத்த ரஷ்யப் பெரும்படைகள் 

திக்குமுக் காடுவதைக் காணுகிறோம் இன்று! 

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 

உறைநிலத்தோ தொட்டல் அரிது.

Dec 5, 2020

குறள் மேல்வைப்பு வெண்பா - 20


குறள் மேல்வைப்பு வெண்பா - 20





நேற்றைய செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி - "ஷோலாப்பூரை சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உலகின் தலை சிறந்த ஆசிரியராக ஒரு சர்வதேசப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசையும் பெற்றார்" என்பது.  ஆனால் செய்தி இத்தோடு முடியவில்லை! அவர் பெற்ற அந்தப் பரிசுத்  தொகையில் பாதியை  தன்னோடு இறுதிச் சுற்றில் போட்டியிதத்  தேர்ந்தெடுக்கப்பட்டுத் தோல்வியடைந்த  மற்ற ஒன்பது பேர்களுடன் பகிர்ந்து கொண்டார்! அதற்கு அவர் கூறிய காரணம் " கடைசி வரை போட்டிக்குத் தேர்வு பெற்ற மற்ற அனைவரும் மனம் உடையாமல் அவர்களது சிறப்பான கல்விப்பணியைத் தொடர இது ஊக்கமளிக்கும் " என்பதாகும்!

"ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் , 
பேரறி வாளன் திரு " 

என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

இச் செயலைப் பாராட்டி . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு  குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு: குறள்  மேல் வாய்ப்பு வெண்பாவில் முதல் இரண்டு அடிகள் ஒரு செய்தியையோ அல்லது அனைவரும் அறிந்த ஒரு கதையையோ குறிக்கும். மூன்றாம், நான்காம் அடிகளில்  அது குறித்த குறள் இடம் பெறும். நான்கு அடிகளும் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட ஒரு வெண்பாவாக அமையும்.  என்னுடைய முந்தைய குறள் மேல்வைப்பு வெண்பாக்களை , தேடிப்  படிக்க  வசதியாக , ஒரு தொகுப்பாக அமைத்திருக்கிறேன்!



பரிசாகத்   தான்பெற்ற பொற்கிழியில் பாதி     

பிரித்தே   பகிர்ந்திட்டான்    தோற்றோ  ருடன்கூட  

ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு  


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


Sep 7, 2018

குறள் மேல்வைப்பு வெண்பா -19

குறள் மேல்வைப்பு வெண்பா -19


துரியோதனன் தர்மனை சூதாட அழைக்கிறான். தர்மனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான்.  துரியோதனன் எத்தனை மூர்க்கனாக இருந்தாலும் அவனது குறைகளையும், நிறைகளையும் அவனே உணர்ந்திருந்த காரணத்தால் , சூது விளையாட தன்னைவிட அவன் மாமனான சகுனியே  சிறந்தவன் என்று முடிவு செய்து ஆட்டம் ஆரம்பிக்கும் முன்  தனக்குப் பதிலாக சகுனியை நியமிக்கிறான்.
அதேபோல், தருமனும், பாண்டவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கும் கண்ணனை தனக்குப் பதிலாக நியமித்திருக்கலாம்! ஆனால் அவ்வாறு செய்யாமல், தானே ஆடுகிறான்.
முடிவு  என்ன ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே!
சூதாட சகுனியே  சிறந்தவன் என்று அவனை நியமித்ததால் , துரியோதனன் வென்றான்.

இதைத்தான் வள்ளுவரும் தனது குறட்பாவில்  ( அதிகாரம் - தெரிந்து வினையாடல் - குறள்  எண்  517 ) கூறுகிறார்.

குறள் :


இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

இதன் பொருள் 

ஒரு  காரியத்தை செவ்வனே செய்யக்கூடியவன் எவன் என்பதை ஆராய்ந்தறிந்து, இக்காரியத்தை அவனைச் செய்ய விடுவைத்தே வெற்றிக்கு வழி.

இதற்க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தருமன் - சகுனி சூதாட்டக் கதையை முதல் இரண்டு அடிகளிலும், இந்தக் கருத்தை விளக்கும் குறளை பின்னிரண்டு அடிகளிலும் கொண்ட மேல்வைப்பு வெண்பா கீழே!

அன்புடன் 
ரமேஷ் 



துரியனோ சூதாட மாமனைத்  தேர்ந்தான் 
தருமனோ தானாடிக்  கெட்டான்  -  அறிவாய்  
இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
                                                                    (பல விகற்ப இன்னிசை வெண்பா )

The English poetic version by Rev. Pope :

"This man, This work will thus work out" let thoughtful king command
Then leave the matter wholly in his servant's hand.

The English poetic version by Suththaananda Barathiyaar 

This work, by this, this man can do 
Like this entrust the duty due.

Meaning 

After having considered " this man can accomplish this, by these means ", let the King leave him in the discharge of his duties.

The story in English :

Duryodana, the head of the Gowravas, challenged Dharman, the head of the Pandavas, for a game of dice. Dharman accepts the challenge. Duryodhanan, knowing fully well that his uncle Sakuni, a master of the dice game, is the best man to represent him and win the game, deputes him to play on his behalf. Likewise Dharman, who was not very proficient in the game, could have deputed his cousin Krishna, a staunch supporter of the Pandavas to play the game on his behalf. But he did not do that. The result is known to all of us. Duryodanan succeeded because he choose the right person and entrusted him to do the job!