Search This Blog

Nov 30, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 2


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

இந்தக் கதையின் முதல் பாகம் பதிப்பித்து  கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டாம் பாகம் இதோ!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :
முதல் பகுதியை இந்த இணைப்பில் பார்க்கலாம் 
http://kanithottam.blogspot.in/2017/11/1.html


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

"முருகனுக்கா? அவன் அண்ணனுக்கா?
-----யாருக் களிப்பது மாம்பழத்தை?
இருவருக்கும் ஒரு போட்டிவைத்து
-----வெல்பவர்க்கே அதை அளித்திடுவோம்"

என்றே  பெற்றோர் முடிவெடுத்தார்.
-----பிள்ளைகள் இருவரையும் அழைத்தார்.
"ஒன்றாய் கிளம்பி இருவருமே
-----இவ்வுலகைச் சுற்றி வரவேண்டும்.

முதலில் வருபவர் அடைந்திடுவார்
-----மந்திர மாம்பழக் கனியைத்தான்.
இதுவே எங்கள்  முடிவாகும்.
-----புறப்படுக! வெற்றி அடைந்திடுக!"

என்றே பெற்றோர் சொன்னவுடன்
-----இருவரும் போட்டிக்குப் புறப்பட்டார்.
வென்றே  வருவோம் என்றெண்ணி
-----வாகன மேற விரைந்திட்டார் .

மயில்மேல் ஏறி முருகனுமே
-----வான வழியாய்  பறக்கையிலே 
ஒயிலாய் எலியின் மேலேறி
-----பிள்ளை யாரும் புறப்பட்டார்


எலிவா கனம்மேல்  ஏறியவர்
-----பெற்றோர் இருவரையும் சுற்றி 
எளிதாய் ஒருமுறை வலம் வந்து
-----அன்னை தந்தையரை வணங்கி 

"வெற்றி எனக்கே  போட்டியிலே
-----தருக மாம்பழம் "எனக்கேட்டார்
"சுற்றவில்லையே நீ உலகத்தை"
-----என்றே பெற்றோர் கேட்டவுடன்


"எங்களுக்குப்  பெற்றோரே
-----உலகம் ; வேறே  ஏதுமில்லை.
உங்களைச் சுற்றி வந்ததுவே
-----உலகைச் சுற்றியதற் கொப்பாகும்.

அடியேன் உலகைச் சுற்றிவிட்டேன்
-----அரிய பழத்தை அளித்திடுக"
என்றே கூறி  அவர்களையே
-----வணங்கி நின்றார் விநாயகரும்.

இதனைக்  கேட்டு மனமகிழ்ந்த
-----சிவனும் உமையும் மாம்பழத்தை
முதலில் வந்தவன் எனஓப்பி
-----மூத்த மகனுக்கு கொடுத்தாராம்.











 முற்றும் உலகைச்  சுற்றிவிட்டு
-----அதன்பின் வந்த முருகனுமே
பெற்ற  தந்தை தாய்மேலே
-----பெரிதாய் கோபம் கொண்டானே.





பெற்றோர் கூறும் வார்த்தைகளை
------சற்றும் கூடக் கேட்காமல்
உற்ற உறவை  விட்டுவிட்டு 
-------பறந்து வெளியே போய்விட்டான் !








இந்தக்கதையால் உங்களுக்கு 
        தெரியும் பாடங்கள் இரண்டு                                     
தந்தை தாயை மதித்திடுக !
          சிந்தித்தே நீ  செயல்படுக. !




எங்கே சென்றான் இளமுருகன்?
தங்க அவனுக்கு ஏதுஇடம்?
உங்கள் இந்தக் கேள்விக்கு
கூடிய விரைவில் பதில் சொல்வேன் .




Nov 25, 2017

கன்னத்தைக் கிழித்த கால்வாய்கள்


கன்னத்தைக்   கிழித்த கால்வாய்கள்


















மேகங்கள் முகட்டில் முட்டி

மழைபெய்து  நதியாய் மாறி

வேகமாய் பெருக் கெடுத்து

மலைச்சரிவின் மேனியில் ஓடி

அருவியாய்க்  கொட்டும் போது

அரித்தெடுத்த கணவாய் போல
                                                                               
                                                                                           

                                                                                           












                                                                                           







                                  

                                
                                                                                                                                                                                                                                                       மனமெனும் முகட்டில் சோக 

                                                                                   மேகங்கள் முட்டி மோதி
                                                                                                                                                                                                                                                       கண்ணீராய் மாறிப் பின்னே
                                                                                                                                                                                                                                                        கண்களில் குளமாய் நிரம்பி
                                                                                                                                                                                                                                                        கன்னத்தில் வழிந்து  கால்வாய்ச்
                                                                                                                                                                                                                                                         சின்னங்கள் பதித்த முகமோ?


ரமேஷ்






Nov 23, 2017

பகவான் சத்யசாயி அவதார நாளன்று

பகவான் சத்யசாயி அவதார நாளன்று

இன்று பகவான் சத்ய சாய்பாபாவின் அவதார தினம்.
இந்த தினத்தன்று , சென்ற ஆண்டு நான் எழுதிய ஒரு ப்ரார்தனைப் பாட்டை மறுபதிவு செய்து அவர் பாதங்களை வணங்குகிறேன்.

ஜெய் சாய்ராம்!

அன்புடன்

ரமேஷ்


பி.கு: புட்டபர்த்தியில் நிறுவப்பட்டிருக்கும் கடவுளர்களின் பல்வேறு சிலைகளைப்  பற்றிய பாடல்களின் இணைப்பையும் கீழே தந்திருக்கிறேன்.

http://kanithottam.blogspot.in/2016/04/4.html
http://kanithottam.blogspot.in/2016/04/3.html
http://kanithottam.blogspot.in/2016/04/2.html
http://kanithottam.blogspot.in/2016/04/1.html






சுருள்முடி    தலைதனில்    விரித்திட்ட.   மகுடம்

அருள்விழி    சிரித்திடும்   அழகிய.  வதனம் 

பருத்தியில்    இருந்திடும்    சத்திய   சாயியின் 

திருவடித்    தரிசனம்    பிறவிப்   பேறே!  

                                                   (கலி விருத்தம்)






Nov 15, 2017

திருவிளையாடல் பாடல்கள் - 1

திருவிளையாடல் பாடல்கள் - 1

இந்தப் பிரதோஷத்திலுருந்து தொடங்கி, திருவிளையாடல் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் சிலவற்றை, 
எனது  சிறிய நான்கு வரிக் கவிதைகளின்  வடிவில் , அவைகளின் ஆங்கில, தமிழ் விளக்கங்களுடன் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மூலக்  கருத்தும், ஆங்கில விளக்கங்களும், படங்களும் shaivam.org இணையத்தளத்திலுருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டுள்ளன.

படிக்கும் அனைவருக்கும் இறையருள் கிட்டுவதாகுக.

அன்புடன்

ரமேஷ்

1. இந்திரன் பழி தீர்த்த படலம்


( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)

பிருஹஸ்பதி தேவ குருவைப்  புறக்கணித்த  பாவத்  தாலும் 
அருந்தவ அந்தண ரிருவரை  அழித்தவூழ் சூழ்ந்த தாலும்
முடியினை இழந்த  இந்திரன்  மதுரைமா நகர மருங்கில்    
கடம்ப வனத்துறை  இறையை பணிந்துதன் பாவம் தீர்ந்தான்.

பிருஹஸ்பதி தேவ குருவைப்  புறக்கணித்த  பாவத்  தாலும் 
அருந்தவ அந்தண ரிருவரை  அழித்தவூழ் சூழ்ந்த தாலும்
வருந்திய  இந்திரன்  கடம்ப வனத்துறை இறையை வணங்கித்  
திரும்பத்தான்  இழந்த முடியைப்  பெற்றானே  பரமனின் அருளால்.       




                                                            (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பாடற்பொருள் :


ஒரு முறை தேவர்களின் குருவாகிய ப்ரஹஸ்பதி தன் அவைக்கு வருகையில் அவரைக் கவனிக்காது இருந்ததால் இந்திரன் அவரது கோபத்திற்கு உள்ளானான். அந்தப் பாவத்தாலும், வேறோர் சமயம், இரண்டு அந்தணர்களுடைய மரணத்துக்கு காரணமாகி, அவனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்ததாலும் அவன் தன்  பதவியை இழக்க நேர்ந்தது. இப்பாவங்கள் விலக  கடம்பவனத்தில் குடிகொண்ட ஈசனை வணங்கி,  இந்திரன் விமோசனம் பெற்றான்.



The story in English :

Brahaspathi was the teacher of the Devas. Once when he visited the abode of Indran, the King of the Devas, he was not given the respect due to him by Indran who was engrossed in the dance being performed by his courtesans. Angered by this, Brahaspathi refused to be the teacher  of  Devas anymore.. His replacement was one who was born out of a wedlock between a  a Brahmin and a Rakshasa,  The new teacher had a soft corner for the Rakshasas and was secretly helping them in their fight against the Devas. When Indran came to know of it, he killed him. Subsequently , when he had to fight against another powerful demon, in order to defeat him, he had to fashion a powerful weapon called Vajraayutham, using the shoulder bone of a saint named Thathichi. Thus he became the cause for his death. Having killed two learned men, he suffered from the curse of Brahmahaththi  and lost his position as the King of the Devas. Listening to the counsel of Sage Agasthya and others, he came down to earth and visited several holy places to get absolved of the curse . Finallu , he came to Madurai and after worshipping the Lord Siva in the form of Lingam at Kadambavanam near Madurai, he attained salvation.  

The Story in Tamil

இந்திரலோகத்து மாதர்களின் நடனத்தை ரசிப்பதில் மூழ்கியிருந்த இந்திரன், தேவகுரு ப்ரஹஸ்பதியின் வருகையைக் கவனிக்கத் தவறியதால் கோபமுற்ற பிரஹஸ்பதி, அவனைப் புறக்கணித்துச் சென்று விட்டார். குருவின் கோபத்திற்கு உள்ளான இந்திரன், அந்தண-ராட்சக்  கலப்பில் பிறந்த ஒருவரை தேவகுருவாகக் கொண்டு யாகங்களை செய்யும் நேரத்தில், அவர் அசுரர்களுக்கு உதவ எண்ணுவதை அறிந்து அவரைக் கொன்றான். பின்பு, வேறு ஒரு அசுரனுடன்  போர் செய்து அவனை வெல்வதற்காக, தாதிச்சி என்னும் மஹரிஷியின் தோல் எலும்பிலிருந்து செய்த ஆயுதத்தை அவரிடமிருந்து வேண்டிப் பெற்று அவருடைய மரணத்திற்கும் காரணமானான். இந்த இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததால் , ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்கு உள்ளாகி, தேவலோகத்தை ஆளும் தகுதியை இழந்தான்..பின்பு அகத்தியர் மற்றும் பல முனிவர்களின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றும், புண்ணிய நதிகளில் நீராடியும் அப்பாவத்தைப்  போக்கிக்கொள்ள முனைந்தான். கடைசியாக மதுரை நகரின் அருகில் ஒரு கடம்பமரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்குப்  பூஜை செய்கையில் அப்பாவம் விடுபட்டு மீண்டும் இந்திர லோகத்தின் அரசன் ஆனான். .



மீனாட்சியை மணந்த படலம்.




மலையத் துவசன் பெற்ற மீனாட்சி  யாளின்  மூன்றாம்
முலையினை மறையச் செய்து மங்கையவள் கரத்தைப் பற்றி  
சுந்தர ஈசனாய் மதுரை  யம்புரி  தன்னில் மணந்து
வந்துறைந் தருளு கின்றான் அவன்புகழ் கூறுதல் அரிதாம்.

                                                                            (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
விளக்கம் :
மலையத்வஜ பாண்டியனுக்கும், அவன் மனைவி காஞ்சனமாலைக்கும், பல தவங்கள் புரிந்ததன்  பலனாக , யாகத் தீயிலுருந்து ஒருபெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை வளர்த்து வந்த அரசனும் அரசியும், அவளுக்கு மூன்று முலைகள் இருப்பதைக் கண்டு கவலையுற்றனர். அப்போது அசரீரியாக ஒலித்த குரல் ' இவளை  பெரும் வீர கன்னிகையாக வளருங்கள். அவள்  தன்னுடைய  கணவனைத் தானே கண்டுகொள்வாள். அத்தருணத்தில் , இந்தக் குறை நிவர்த்தி ஆகும் " என்று அருளியது.
மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , அரியணையில் அமர்ந்த அந்தக் கன்னிகை, அணைத்து மன்னர்களையும் போரில் வென்று, பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிபி படையுடன் சென்றால். அவ்வமயம் , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்த நிகழ்வு, மீனாட்சி அவதார படலம், மீனாட்சி திருமணப் படலம் ஆகிய படலங்களில் கூறப்பட்டுள்ளது.

படமும், கருத்தும். sivam.org இணையதளத்தின் திருவிளையாடல் பதிப்பிலுருந்து பெறப்பட்டவை. 

The complete stories in English, as given in Sivam.org

Indrhiran getting absolved of his sins :

Indra the king of celestials was engaged in attending to the dancers of his paradise, when his guru (spiritual preceptor) Brahaspati came to see him; and Indra was so very absorbed in this pastime that he did not pay proper attention to the guru nor rise to salute him. Brahaspati departed in great anger; and in consequence of Indra's indifferent attitude to his guru, he had to lose all his prosperity and before that the sympathy of his guru. Having no longer his former preceptor, Indra took a three-headed giant, (asura) for his preceptor, but inducing him to make a sacrifice (yaga), he learned bitterly that the new guru purposed to destroy the gods and favour his clan. Therefore Indra killed him whereby he incurred the sin of Brahma-hatti (crime of killing a brahman). The father of the giant would not allow this act to go unrevenged. He made a yagam, from which Vridhrasura came forth, whom he ordered to kill Indra immediately: the latter struck the giant, but finding that he could not kill him, hid himself in a lotus flower. He them went to Brahma and enquired why he could not kill the asura; and was told that his weapon had become powerless; but he was directed to a place where an old Brahmin named Tatichi had long been performing penance, and was advised to take his shoulder-bone, which would suffice for the object in view; since it was moulded of a good number of powerful weapons that were entrusted to him. The old Brahmin gladly gave up his life and Indra, taking his shoulder-bone by its aid killed the asura, hereby the Brahmahatti was doubled;  It  was recommended that Indra in order to the removal of his sin, should go down to the earth, visit the sacred places, and bathe in the rivers. This he did, without finding relief till he came to a certain forest of lili (Kadamba) trees, where suddenly he found his burden removed. Being surprised at this, he commanded search to be made around, when a lingam, the emblem of Siva was found under a lili tree, to which he made puja, and so great was his joy that even his speech became confused. As it was a forest, there were no flowers with which to make garlands; but on looking he saw a tank with lotus flowers of which he made garlands and from this use of its flowers the tank obtained the name of Pottamarai or the Golden lotus.

Meenakshi incarnation and her marriage to Lord Sundareswarar.


Malayadhwaja-Pandyan although he had many wives, the chief of them being Kanjana-malai, daughter of the Chola King, yet had no child. To beget  a child he performed ninety-nine aswamedha sacrifices, when Indra, becoming alarmed, (since another sacrifice, would entitle the King to the Indra's throne) appeared to him and said, "Why are you troubling   yourself ? Perform the Puthrakameshti Yagna  before the temple of the God Siva, and you will have your wish granted." While the King was performing this yagna , a female child of three years ,  was born from the flame of the sacrifice.  While bringing up the child it was found that she had three breasts,  which troubled the foster-parents very much. They parayed to God and  the voice of the god was heard from heaven, bidding them give the child the same education as for a man, and adding, that when her appointed husband should come, then one of the breasts would disappear: when she was grown up they had her formally installed on the throne, and then Malaya-Dhwajan died.
 When the above woman, Tadathakai (or Invincible) was ruling,  she went and conquered all the neighbouring Kings. She next conquered Indra, and then proceeded to attack Kailasa when Siva , smiling a little, came out. As soon as he  saw her. her third breast disappeared, and she realised that Shiva was her husband-to-be . The marriage was performed at Madurai.

Nov 14, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 1- A song for the Children's Day.

இன்று குழந்தைகள் தினம்!
ஜவாஹர்லால் நேரு பிறந்த இந்த நவம்பர் 14-ம் தேதி, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று குழந்தைகளுக்காக ஒரு பாடல்.
பிள்ளையாரும் முருகனும், மாம்பழத்துக்குப் போட்டியிட்ட கதை.
இதை,நீளம் கருதி, இரண்டு பகுதிகளாக வெளியிடப்போகிறேன்.
முதல் பகுதி இன்று.

அன்புடன் 
ரமேஷ் 

acknowledgements : The pictures used in this blog have been taken from various sites in the internet domains. I thankfully acknowledge them.




பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 1

சிவபெரு மானும் பார்வதியும்
-----கைலா யத்தில் குடியிருந்தார்.
அவர்க  ளுடைய  இருமகன்கள்
------பிள்ளை யாரும் முருகனுமே.
                                                                               
இரன்டு பேரில் இளையவற்கு
------முருகன் என்னும் பெயரிட்டார். .           
முருகனுக்கு முன் பிறந்த
------பிள்ளை  பிள்ளை யாராமே.

பிள்ளை யாருக்கு ஆனைமுகம்.
-----முருக னுக்கோ ஆறுமுகம்.
கொள்ளை அழகு இருவருமே.
-----குறும்பு செய்வதில் குறைவில்லை.





நல்ல பிள்ளைகள் இருவருமே
-----நன்றாய் நாளும் விளையாட
செல்லப்   பிராணி கள்இரண்டை
-----வாகன மாகப் பெற்றாராம்.







முருகனுக்கு மயில் பறவை
-----மூத்த வனுக்கோ மூஞ்சூறு
இருவரும் அவைமேல் ஏறிக்கொண்டு
-----ஓடி ஆடி மகிழ்வாராம்.







ஒருநாள் சிவனின் வீட்டிற்கு
-----நாரத முனிவர் வந்தாராம்.
பெரிய மாம்பழம் ஒன்றினையே
-----சிவபெரு மானிடம் தந்தாராம்.

"இந்தப் பழமொரு சிறந்த பழம்
-----மந்திர சக்திகள் உள்ளபழம்
இந்தப் பழத்தை உண்ணுபவர்
-----எல்லா நலமும் பெறுவாரே.

ஆனால்   ஒருவர் மட்டும்தான்
-----இந்தப் பழத்தை சாப்பிடலாம்.
இருவர் இதனை சாப்பிட்டால்
-----மந்திர சக்திகள் மறைந்துவிடும்."

என்று நாரதர் சொன்னவுடன்
-----இரண்டு பிள்ளையும் ஓடிவந்து
"எனக்கு வேண்டும் இந்தப்பழம்"
 -----என்றே தந்தையைக் கேட்டார்கள்.

முதலில் பிறந்த மூத்தவன்நான்
-----அதனால் எனக்கே தருகவென
மோதகப் பிரியன் யானைமுகன்
-----வாதம் செய்து சாதித்தான் .

சின்னப் பிள்ளை செல்லம் நான்.
-----அதனால் மந்திர மாம்பழத்தை
என்னிட மேதர வேண்டுமென்று
-----ஆறுமுகத்தான்  அடம் பிடித்தான்.




குழந்தைகளே,
இந்தப் போட்டியை சிவனும் பார்வதியும் எப்படி சமாளித்தார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
























































Nov 10, 2017

நீங்கள் எந்த விதம்?

நீங்கள் எந்த விதம்?




சோதனைகளே இல்லாத வாழ்க்கையே கிடையாது.
எல்லோருக்கும் சோதனைகள் வரும்.
வரும் சோதனைகளை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் விதங்கள் மாறுபடும்.
எந்த விதம் சிறந்தது?
நீங்கள் எந்த விதம்?
படித்துப் பாருங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 



நீங்கள் எந்த விதம்?

ஜாதகக்    கட்டுடனே   ஜோதிடரைத்   தேடிப்போய்   
பாதகமாய்ப் போயிருக்கும்  கோளிருப்புக் கட்டங்களை 
சோதித்து அவர்சொல்லும் பாவபரி காரங்களை 
மீதியே  வைக்காமல் செய்பவரும் ஒருரகத்தார். 

போனபல பிறவிகளின்  பாவபுண்யக்  கணக்காலே 
ஆனதிந்த நிலையென்று ஊழ்வினையை   நொந்துகொண்டும் 
நான்முகத்தான் நம்தலையில் எழுதிவைத்த தேயிதென்றும் 
ஏன்என்று கேட்காமல் ஏற்பவர்கள் ஒருரகத்தார்.

என்னதுயர் வந்தாலும் எதிர்க்கின்ற  மனத்துணிவும் 
இன்னலினால்  எந்நாளும் மனமுடைந்து போகாமல் 
என்திறனை வெளிக்கொணர வாய்ப்பிதென்ற மனத்தெளிவும்  
கொண்டென்றும்  கலங்காமல்  எதிர்கொள்வோர்  ஒருரகத்தார்.

இந்தமூன்று வழிகளிலே  எந்தவழி நல்லவழி?

மந்திரங்கள் சொல்லுவதால் வந்ததுன்பம் விலகிடுமா?
நொந்துபோய் நிற்பதனால்  வந்ததுயர் நீங்கிடுமா ?   
எந்தநாளும் மந்தமில்லா உந்துதலே முந்திவரும்.

Nov 9, 2017

சென்னை- இன்று

சென்னை- இன்று

வடகிழக்குப் பருவக்காற்று சென்னைக்கு மழையைக் கொண்டு வந்திருக்கிறது.
2015-ல் மழையால் நாம் பட்ட அவதிகளிருந்து மாநகர ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தது பொய்யாகிவிட்டது. 
முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே  தீவிரமாகப் பெய்த மழை, சென்னையின் உட்கட்டமைப்புகளின் போதாக்குறையை படம் பிடித்துக் காட்டிவிட்டது.
இந்த நிலைமைக்கு யார் காரணம்?
லஞ்ச ஊழல்களிலும், சிவப்பு நாடாக்களிலும் சிக்கியிருக்கும் அரசு இயந்திரம் ஒரு காரணம் என்றாலும், புறநகரில் ஏரிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துப்  போடப்பட்ட  மனைகளை வாங்கி வீடு கட்டியவர்களும் ஒரு காரணம்தான்!

இந்த இரண்டு காரணங்கள் பற்றி   இரு  பாடல்கள்.

அன்புடன் 
ரமேஷ் 


இந்த நிலைமைக்கு மக்களே  காரணம்  !

ஏரிகுளம் நீர்நிலைகள் யாவையுமே தூர்த்துவிட்டு
கூறுபோட்டு  வீடுகளைக்  கட்டியதால் - மாரியதன்
நீர்வடிந்து போகாமல்  வீடுகளே ஏரிகளாய்
மாறிவிட்ட பேரிழிவைக் காண் .
                                                                                                                                                                 (பல விகற்ப இன்னிசை வெண்பா )

XML


இயற்கையை வெல்லுதல்  ஏலாதே*   செல்வ                    *ஏலாதே= இயலாதே 
மயற்கையில் மூழ்கிய மாந்தரே- நேமமே*                         *நேமமே = நியமமே 
மீறியே நீசெயும்  காரியம் யாவையும் 
பேரிடர் ஈட்டிடும் காண்.
                                                                                                                                             (பல விகற்ப இன்னிசை வெண்பா )



XML
அரசின் அக்கறையின்மையும், அதிகாரிகளின் மெத்தனமும்

இரட்டையிலை யாருக்கென இழுபறிப்புச்  சண்டையிலே 
இரவுபகல் பாராமல் நேரத்தைக்  கழிப்பதினால்
வரவிருக்கும் வான்மழையால் பெருஞ்சேதம்  வருமென்று
தெரிந்திருந்தும்  வரிந்துகட்டி வேலைசெய்ய நேரமில்லை!

சாக்கடைகள் அடைபட்டு போக்கிடமே இல்லாமல் 
தேக்கிநிற்கும்  நீர்வாசம்  மூக்கைத்  துளைக்கிறது.
தூறுவார தந்தபணம்   "வேறுவேறு" வழிகளிலே 
தாறுமாறாய்ப் போனதாலே  நாறிப்போச்சு  நம்மவூரு !.

கரைபோட்ட வேட்டியிலே கரைசிறுதும் ஏறாமல் 
குறைகேட்க வருகின்றார் காவலர்கள் குடைபிடிக்க. 
வருமுன்னே காப்பதற்கு வழியேதும் செய்யாமல்  
இருப்பதெல்லாம் போனபின்பு  இழப்பீடு அறிவிப்பு!!.

சிலநாட்கள் பெய்திட்ட சிறுமழைக்கே இந்நிலைமை!
பலமாகப் பலநாட்கள் பெய்திட்டால் என்னாகும்?
அலுவலரும் தலைவர்களும்  ஊழல்கழப்* பொழித்து            
சுறுசுறுப்பாய்  செயல்படவே சேர்ந்தே குரல்கொடுப்போம்.

*கழப்பு - சோம்பல் ; ஊழல்கழப்* பொழித்து-  தலைவர்களின் ஊழலையும், அலுவலர்களின் சோம்பலையும் ஒழித்து 

பின் குறிப்பு;
2015 சென்னை மழை இடரின் போது , அதன் பல பரிமாணங்களை  பற்றி, நான் எழுதிய சில பாடல்களின் இணைப்பு கீழே! படித்துப் பாருங்கள். நன்றி.

http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_24.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_20.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_13.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post.html