Search This Blog

Oct 30, 2022

முருகனை எண்ணுவோம்.!

 முருகனை "எண்ணு"வோம்.!

இன்று சூரசம்ஹாரம். இந்த நாளன்று சில வருடங்களுக்கு முன் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் - சிறு திருத்தங்களுடனும் , ஒலி வடிவ இணைப்போடும் .

அனைவரும் படித்து முருகனருள் பெறுக!

அன்புடன் 

ரமேஷ் 



முருகனை "எண்ணு"வோம்.!


ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே  வானையை            #1*2                  
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்  
ஈரிரண்டு#  நால்வேதத்  துட்பொருளை உணர்ந்தபின்    #2*2
பிரணவத்தை   ஈசர்க்கு  போதித்தவன் 

 
மூவிரண்^  டாறான முறுவல் முகங்களுடன்                  ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^  எண்திக்கும் அரக்கரை  அழித்திடவே       ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

 
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும்      ^5*2                     
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^  பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு    ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
  
ஏழிரண்டு^  பதினான்கு  இரவுகள்  வளர்ந்திட்ட             ^ 7*2     
முழுமதியைப்  பழித்திடும்  வதனத்தினன்.
எட்டிரண்டு^  பதினாறு செல்வமும்  சிறப்புடன்              ^  8*2
கிட்டிடும்   குமரனைத்  துதிப்பவர்க்கே.

சித்தர்க ளீரொன்ப தில்^மூத்த  அகத்தியர்க்கு               ^ 9*2
சத்தான முத்தமிழைப்  போதித்தவன்.
ஐம்பூதம் ஐம்பிராணன் ஐம்புலன் ஐம்பொறியிவ் 
விருவத்தையும்^   இங்கு உருவித்தவன்                            ^ 10*2
                          
எண்கணக்கி  லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி 
பண்புனைந்  துன்புகழ்  பாடினேனே!
என்கணக்கு  இப்பிறவி. யில்முடியு  முன்னமே
எனையாண்டு  அருள்புரிவாய்  குமரவேளே!

 





 
பத்து இரு    

Oct 26, 2022

குறள் மேல்வைப்பு வெண்பா 22

குறள் மேல்வைப்பு வெண்பா 22


திருக்குறள் 62-ஆம் அத்தியாயத்தில் (ஆள்வினை உடைமை) வரும் 619-ஆம் குறள் இது 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்!

இதன் பொருள் :

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

என்றைக்கும் பொருந்தும் இந்தக் குறளின் ஒரு இன்றைய எடுத்துக்காட்டு ,ரிஷி சுனக்  தான் முதல் முறை அடைந்த தோல்வியால் தளராமல் மீண்டும் போட்டியிட்டு பிரிட்டனின் பிரதமர் ஆன செயல்!

இக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியின் சொற்களில்>

Though Fate is against fulfilment

Hard Labour has ready payment

இக்குறளை  ஈற்றடியாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா , கீழே!

அன்புடன் 

ரமேஷ் 



சென்றமுறை தோற்றாலும் சோர்ந்து சுணங்காமல் 

நின்றே மறுமுறையும்  வென்றான் சுனக்ரிஷியே* !         * Rishi Sunak

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்! 

Oct 24, 2022

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

 தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 



அன்புடன் 

ரமேஷ் 



நரகாசுரனை கிருட்டிணன் கொன்று 

-----உலகோர் மகிழ்ந்தது  இந்நாளோ? 

இரகுகுல ராமன் சீதையை மீட்டு  

-----அயோத்தி மீண்ட நன்னாளோ?

 

என்னா ளாயினும் இல்லந்தோறும்

-----தீபங்கள்  ஏற்றித் துதிக்கின்ற 

இந்நா ளில்லெல் லோர்க்கும் எந்தன் 

-----தீபத்  திருநாள் வாழ்த்துக்கள்  


மாசுபடுத்தா வண்ணம் வெடிக்கும் *             * Green crackers

-----வெடிகளை வாங்கிட வாழ்த்துக்கள்

காசு கொடுத்து வாங்கிய வெடிகள் 

-----காதைப் பிளந்ததிட  வாழ்த்துக்கள் 


 

வீட்டில் பட்சணம் செய்ய முயன்ற 

-----முயற்சிகள் வென்றிட வாழ்த்துக்கள் 

வெளியில் வாங்கி விழுங்கிய பட்சணம் 

-----வயிறோ டுடன்பட வாழ்த்துக்கள் 


பலமணி நேரம் பார்த்து எடுத்த 

-----லேட்டஸ்ட் பேஷன் புடைவைகளை 

பக்கத்து பிலாட்டு பாமா முந்தியே 

-----வாங்கா திருக்க வாழ்த்துக்கள் 


மனதிருள் நீங்கி ஒளிபெற் றுள்ளம்  

-----துலங்கி மிளிர்ந்திட வாழ்த்துக்கள்

கனவுகள் பலித்து  அனுபவம் இனித்து 

-----மனையறம் சிறந்திட வாழ்த்துக்கள் 


  

 


Oct 22, 2022

பிரதோஷப் பாடல் - 47

 பிரதோஷப் பாடல் - 47


இன்றைய பிரதோஷப் பாடல். 

கீழ்க்கண்ட படத்தின் உந்துதலால் எழுந்தது!  

பிரதோஷத்தன்று, நந்தியின் கொம்பினிடைவழியாக இறைவனை  தரிசித்து, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை உரைத்தோமாயின், அப்பிரார்தனைகள் நிறைவேறும் என்று கூறுவர். 

இது குறித்த ஒரு சிறு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 







அந்தி வேளை *வந்து கோயில் 
-----ஈசன் சந்தி** முந்தியே 
குந்தி^ யுள்ள நந்திபின்னே 
-----நிந்து# அந்த நந்தியின் 
காதில் நமது விரும்புதலை  
-----ஓதி வேண்டி வணங்கிடின்
ஆதிசிவன் அவன் அருளால் 
-----அவை அனைத்தும் கிட்டிடும்


வந்து கோயில் = கோவில் வந்து 
** சந்தி = சன்னதி  
^ குந்தி = கால் மடித்து அமர்ந்திருத்தல் 
நிந்து= நின்று 



Oct 19, 2022

வீடற்ற நாய்கள் (stray dogs)

வீடற்ற நாய்கள் (stray dogs)

நேற்று மாலை தொலைக்காட்சிகளிலும், இன்று காலை செய்தித் தாள்களிலும் இடம் பெற்று இருக்கும் ஒரு செய்தி  -  ஒரு ஏழு மாதக் குழந்தை ஒரு தெருநாயால் கடிபட்டு உயிர் இழந்தது  -என்பது.  இது நடந்த இடம் ஒரு தெருவில் அல்ல ! புது டெல்லியில் உள்ள ஒரு உயர்ந்த ரகக்  குடியிருப்பில் -  நம் பிரிகேட் லேக் பிரண்ட்  போன்றது! இந்தக் குடியிருப்பில் வாழும் பலரும் இத்தகைய தெரு நாய்களுக்கு பயந்து வாழ்கின்றனர்! இங்கேயும் கதை இதுதான்! வீட்டில் வளர்க்கப் படாமல் சுற்றித் திரியும் தெரு நாய்களின் உரிமை பற்றி பலரும் பேசலாம்! சட்டங்களும் இருக்கலாம்! ஆனால்  ஏதேனும் துரதிஷ்டிரமான சம்பவங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பு ?

இது பற்றி ஒரு சிறு பாடல்.

துயரத்துடனும், ஒரு சிறிது பயத்துடனும் 

ரமேஷ்.




நாய்கட்கு நியாயம் கேட்டு வாய்பேசும் வட்டத் தார்கள்  

சேயொன்று தெருவில் மேயும் நாயொன்றின் வாயில் சிக்கி 

காயங்கள் பட்டுப் பின்னே பலியாகிப் பிணமாய்ப் போனால்  

வாய்விட்டுக் கதறும் அந்த தாய்க்கென்ன பதிலைச் சொல்வீர் ? 

Oct 1, 2022

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம்

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம் 

சென்ற பதிப்பில் துர்க்கையின் அவதாரத்தைப் பார்த்தோம். இந்தப் பதிவில் வெவ்வேறு கடவுளர்களும், தேவர்களும் துர்க்கைக்கு பல்வேறு ஆயுதங்களை அளிக்க, அவவற்றைப் பூண்டு மகிஷாசுரனுடன் போர்புரிய  துர்க்கை தயாரான காட்சியைக் காண்போம்- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்  


DURGA’S ARMOURY

 

Now, it was the turn of every God to bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses. Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand, Prajapati gifted her Sphatik (snow rock crystal) necklace and Bramha handed out a kamandal. The King of mountains - Himalaya – gave her a Lion which became her vehicl



துர்க்கையின் படைக்கோலம்

திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே  

திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே 

இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்

தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே

வாயுதே வன்தந்த  வில்லம்புகள்

ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 

பிரமனின் கமண்டலம் ஒரு கையிலே- விசுவ

கருமனின் கோடாலி ஒரு கையிலே

காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்

சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.


உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்

செங்கதிரோன் சீற்றமதைக் கண்களில் ஏற்றினள்

சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைக்கவே

இமயவான் அளித்தஅரி மாமீது ஏறினள்