Search This Blog

Aug 23, 2018

பிரதோஷப் பாடல்-9 Pradosham song-9

பிரதோஷப் பாடல் - 9

பிரதோஷப்  பாடல்


பிரம்ம தேவனின் புதல்வர்களும், முனிவர்களுமான சனகன், சனாதனன் , சநந்தனன், சனத்குமாரர் என்ற நால்வரும் , பல நூல்கள் கற்றபின்னும் , பெருந்த்தவங்கள் புரிந்த பின்னும்  உண்மையை உணரமுடியாத நிலையில், ஆலமரத்தடியில் மோனத்திருக்கோலத்தில் வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் பணிந்து வேண்டினர். வாய்மொழிகளுக்கு ஏதும் வேலையில்லாமலே ,  அவர்களது ஞானக்  கண்ணைத் திறந்தான் சிவபெருமான்.
இது பற்றி, ஒரு பாடல் ,  இன்றையப்  பிரதோஷத்தன்று.

அன்புடன் 

ரமேஷ் 





சனகன் சனாதனன் சனந்தனன் சனத்குமரன் 
எனும்நான்கு  நான்முகன் பெற்ற  முனிவர்க்கு  
மோனக்  கோலத்தில் ஆலின் அடியமர்ந்து 
ஞான ஒளிதந்த  நாயக னைப்பணிவாம்



Sanakan, Sanandanan, sanaadanan and sanathkumaaran were four sons of Brahma. These sages, even after involved studies were unable to realise the Supreme Truth. They came to Lord Shiva, who was seated under the Banyan Tree in the Yoga pose and prayed and medidated before  him. Even without uttering a single word, the Lord brought true realaisation to those sages, showing that the Ultimate Truth can not be explained in words but has to be experienced.

Aug 15, 2018

அடி - உதை - குத்து- கொல்லு- புதிய தேசிய கீதம்?

"அடி - உதை - குத்து- கொல்லு"-  
இதுதானா நம் புதிய தேசிய கீதம்?


இன்று நம்முடைய நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல துறைகளிலும் நாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதை மறுப்பதற்கில்லை. 
இன்று நாம் மகிழ்வுடன் அந்த முன்னேற்றங்களை எண்ணிப் பார்த்து மகிழ வேண்டிய நேரம். 
என்றாலும், சில நாட்களாக மக்களுடைய எண்ணத்திலும், நடத்தையிலும் ஒரு வருந்தத்தக்க மாறுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது   என்று அஞ்சுகிறேன்! 
சிறு சிறு காரணங்களுக்காகவும் , வதந்திகளை நம்பியும், கூட்டமாக வன்முறையில் ஈடுபடும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 
பிள்ளை பிடிக்கிறார்கள் என்ற வதந்தி, கல்லூரிக்குச் செல்லும் பேருந்தைக் கடத்தி  வன்முறை, ( இது சென்னைக்கே உரியது), பசுவைக் கொள்கிறார்கள் என்ற வதந்தி, கலப்புத் திருமணம் -- இவ்வாறு வெவ்வேறு காரணங்களுக்காக. சட்டத்தை தன கையில் எடுத்துக்கொண்டு,  கூட்டம் கூட்டமாக வன்முறைகளில் ஈடுபடும் நிகழ்வுகளைப்  பற்றி , மனம் வருந்தி இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காத்திருக்க வேண்டி, இந்த சுதந்திர தினத்தன்று ஒரு பாடல். 

அன்புடன் 

ரமேஷ்

"அடி - உதை - குத்து- கொல்லு"- 
இதுதாநம் னா  புதிய தேசிய கீதம்?


செய்தி
வெளியூருக் கூட்டம்ஒண்ணு
நம்மூருக் குள்ளவந்து
பிள்ளை பிடிக்குதுன்னு
வாட்சப் நியூசு .
கூட்டம்
பஞ்சாயத்து பார்க்கருகே
தமிழ்தெரியா பெண்ணொருத்தி
பள்ளிப் பசங்களுக்கு
மிட்டாய் தராளாம்.
விடாதே நீ , அவளப் பிடி
கட்டிப்போட்டு  தோலைஉரி .
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு

பொதுமக்கள் 
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?

செய்தி 
விடுமுறையும் முடிஞ்சாச்சு
கல்லூரி  திறந்தாச்சு
பஸ்நாளை கொண்டாடும்
நேரம் வந்தாச்சு
கூட்டம்
ரூட்டுதலை தலைமையிலே
பேருந்தை கடத்துவோம்.
பொதுமக்கள் போலீசு
தடைசெஞ்சா மிரட்டுவோம்.
கல்லெறிவோம் சில்லுடைப்போம்
பேருந்தில்  தீயிடுவோம்
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு

பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?

செய்தி 
வீதியிலே பசுமாட்டை  
ஒட்டிக்கிட்டு போரவங்க 
பசுவைக்கொல்லப் போறாங்கன்னு
சேதி சொன்னாங்க.
கூட்டம்
சொன்னசேதி சரிதானா 
இல்லவெறும் பொய்தானா 
நின்னுபேச நேரமில்லை 
கொன்னுபசுவை போடுமுன்னே 
ஓடிப்போயி ஆளைப்பிடி 
உருட்டிமிரட்டி விரட்டிஅடி
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு
பொதுமக்கள் 
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?
-
செய்தி
மேல்ஜாதி பெண்பிள்ளை
கீழ்ஜாதி பையனையே
காதலித்து கைப்பிடித்து
ஓடிப் போனாளாம்
கூட்டம்
வீதியிலே நடக்கையிலே
சாதிசனம் சிரிக்கிறது! !
ஓடிப்போன ஜோடிகளை
தேடிப்பிடித்து கட்டிவிடு .
தோலை உரித்துவிடு
காலனியைக்   கொளுத்திவிடு
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு

பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?



















     











Aug 10, 2018

ரசவாதம்

நகர மறுக்கும் நிமிடங்களும் நாட்களும் எப்படி நிகழ்வதென்றே தெரியாமல் மாதங்களாகவும், வருஷங்களாகவும் மாறிவிடுகின்றனவே! இந்த ரசவாத விந்தையை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? 

அன்புடன் 

ரமேஷ் 

ரசவாதம் 

காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!

இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !

நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.

செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.

நிமிடங்களாக நீளத் தயங்கும்  நொடிகளையும் 
மணிகளாய் மாற  மறுக்கும் நிமிடங்களையும்  

எப்படியோ தாண்டி 

ஓரு  நாளைக் கடந்து 
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.

ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும், 

நாட்கள் வாரங்களாகவும் 
வாரங்கள் மாதங்களாகவும் 
வியப்புக்குரிய வேகத்துடன் விரைகின்றனவே!

திடீரென்று ஒரு நாள்
நாள்காட்டியைப் பார்க்கையில் 
ஒரு வாரமோ, ஒரு மாதமோ கழிந்துவிட்டிருக்கிறதே!


இது என்ன ரசவாதம்?