Search This Blog

Sep 29, 2022

நவராத்திரி- துர்க்கை அவதரித்தல்

 

நவராத்திரி- துர்க்கை அவதரித்தல் 

 

ஒன்பது நாட்களும், ,துர்க்கை , சரஸ்வதி, லக்ஷ்மி  வடிவங்களில் தேவியை வழிபடும் நாட்கள்

 

அண்டங்களை எல்லாம் துன்புறுத்தி  வந்த மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய, மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் இணைந்து , துர்காதேவியைத் தோற்றுவித்து, அவளுக்கு சகல ஆயுதங்களையும் அளித்ததாக , மகரிஷி மார்க்கண்டேயர் எழுதியுள்ள 'துர்கா சப்தசதிஎன்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதாரம் எடுத்த துர்க்கை மகிஷாசுரனோடு போர் புரிந்து , அவனை அழித்ததை நவராத்ரியின் போது கொண்டாடுகிறோம்.

இதைப் பற்றி ஒரு கவிதை. சில வருடங்கட்கு முன் பதிவு செய்தது.

 சற்று நீண்ட கவிதை என்பதால், இந்த நவராத்திரியின்போது மூன்று பாகங்களாகப் பதிவு செய்கிறேன்.

 பகுதி 1. துர்க்கை அவதாரம் 

பகுதி 2. துர்கை போர்க்கோலம் 

பகுதி 3. அரக்க வதம் 

பகுதி 1 இந்தப் பதிவில் 

படித்து தேவி அருள் அடையுங்கள்.

 

ரமேஷ்  

 

HOW DURGA WAS CREATED.

 

Mahishasura had snatched the rights of the Sun, Indra, Fire, Wind, Moon, Yama, Varun (rain) and other gods and has made the heavens his new home.

Now, the homeless demi-Gods roamed on earth like ordinary humans as they had nowhere to go. The demi-Gods spoke of how they were now counting on the Holy Trinity to save them from this misery. Listening to the anguish of the demi-Gods, the bearer of discus – Lord Vishnu – emitted a divine light. Similarly, Brahma, Shiva and Indra emanated divine light that combined to form a huge mountain of great energy.



The demi-gods were amazed at the flames of that energy being discharged in all the four directions. That mass of energy was unmatchable in the three worlds and in no time it got converted into a woman. Her face was formed as a result of Shiva’s divine light. Yamraj’s (God of death) divine energy gave her long, lustrous hair. Vishnu’s almighty energy formed her powerful arms. Her breasts were formed as a result of the Moon God’s power. Varun’s might made her thighs and calf muscles while the Earth formed her buttocks. Her feet were shaped when Bramha blessed her with his divinity and the Sun’s ability transformed into the fingers of her feet. The Vasus shaped the fingers of her hands and Kuber’s prowess patterned her nasal passage. Agni or the Fire God’s vigour translated in the three eyes of the devi, while Prajapati’s efficiency took the shape of her teeth. Thus, the great Goddess Durga came into being.

 

 

 

துர்க்கை அவதரித்தல்

முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள்
!

 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - 
மண்ணரசி = பூமாதேவி 

Sep 27, 2022

தெரு நாய்கள்

இன்று காலை "பிரிகேட் லேக் பிரண்ட் " வளாகத்தில் நண்பர் மதுசூதனுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது சில தெருநாய்களைக் கண்டு ஒதுங்கினேன்.அப்போது நண்பர் கூறினார் - " பயப்படத்  தேவையில்லை! இவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது" என்று. அதற்கு அடையாளமாக கழுத்திலே ஒரு பட்டை காணப்பட்டது. காது நுனியும் வெட்டப்பட்டு இருந்தது. 

அப்போது எனக்குத் தோன்றியது  - "சரி, இந்த அடையாளங்களோடு நாய்களைப் பார்த்தால் பயப்படத்  தேவையில்லை. மனிதர்களையும்  "இவர்  எத்தகையவர்" என்று பார்த்தவுடனே கண்டுகொள்ள, இம்மாதிரியான அடையாளங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" 

இக்கருத்து ஒரு கவிதை வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 

 



தெரு நாய்கள்



தடுப்பூசி போடப் பட்டு
------தெருவிலே திரியும் நாயால்
நடப்போர்க்கு ஆபத் தொன்றும்
------நேர்ந்துவிட  நியாயம் இல்லை

காதுநுனி வெட்டி இருந்து
------கழுத்திலே பட்டை இருந்தால்
ஏதுமந்த நாய்க ளாலே
------எவர்க்கும்கே  டில்லை யென்றே .
பார்த்ததும் அறிந்து கொள்வோம்
------பயப்படத்  தேவை இல்லை

அதுவேபோல்   மனிதர் களையும்
------ பார்த்ததும்  பகுத்து அறிந்து
இடரிவர் இழைப்பார்  என்றால்   
----- தொடர்பினை விலக்க வழிகள்   
எதுவேனும்  உண்டோ அறியேன்  
-------மதிஞானம் உடையோர் உரைப்பீர் !




Sep 25, 2022

மஹாலய ( மாளய) அமாவாசை

பல்வேறு காரணங்களால் சிலமாதங்களாகத் தடைப்பட்டிருந்த என் கவிதைப் பயணத்தை,
நண்பர் ஒருவரின் உந்துதலால் மீண்டும் தொடங்குகிறேன், இந்த மாளய அமாவாசை தினத்தன்று!

அன்புடன் 
ரமேஷ் 

மஹாலய ( மாளய) அமாவாசை

விண் செல்லும் பாதையிலே

வீற்றிருக்கும் முன்னோரை* 

மண்வாழும் மாந்தரெலாம்
எண்ணத்திலே இருத்தி

எண்ணீரை** அவர்க்குணவாய்
அளித்தின்று தொழுவாரேல் 

எண்ணற்ற பலன் பெறுவர்  
என்றுமவர் ஆசியினால் ! 

* உயிர் பிரிந்தபின் விண்ணுலகம் ( சொர்க்கம் ) அடையுமுன், மூன்று தலைமுறை பித்ருக்கள்
பித்ருலோகத்தில் இருப்பர் என்பது ஐதீகம்.

** எள் + நீர் = எண்ணீர்