Search This Blog

Sep 27, 2022

தெரு நாய்கள்

இன்று காலை "பிரிகேட் லேக் பிரண்ட் " வளாகத்தில் நண்பர் மதுசூதனுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது சில தெருநாய்களைக் கண்டு ஒதுங்கினேன்.அப்போது நண்பர் கூறினார் - " பயப்படத்  தேவையில்லை! இவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது" என்று. அதற்கு அடையாளமாக கழுத்திலே ஒரு பட்டை காணப்பட்டது. காது நுனியும் வெட்டப்பட்டு இருந்தது. 

அப்போது எனக்குத் தோன்றியது  - "சரி, இந்த அடையாளங்களோடு நாய்களைப் பார்த்தால் பயப்படத்  தேவையில்லை. மனிதர்களையும்  "இவர்  எத்தகையவர்" என்று பார்த்தவுடனே கண்டுகொள்ள, இம்மாதிரியான அடையாளங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" 

இக்கருத்து ஒரு கவிதை வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 

 



தெரு நாய்கள்



தடுப்பூசி போடப் பட்டு
------தெருவிலே திரியும் நாயால்
நடப்போர்க்கு ஆபத் தொன்றும்
------நேர்ந்துவிட  நியாயம் இல்லை

காதுநுனி வெட்டி இருந்து
------கழுத்திலே பட்டை இருந்தால்
ஏதுமந்த நாய்க ளாலே
------எவர்க்கும்கே  டில்லை யென்றே .
பார்த்ததும் அறிந்து கொள்வோம்
------பயப்படத்  தேவை இல்லை

அதுவேபோல்   மனிதர் களையும்
------ பார்த்ததும்  பகுத்து அறிந்து
இடரிவர் இழைப்பார்  என்றால்   
----- தொடர்பினை விலக்க வழிகள்   
எதுவேனும்  உண்டோ அறியேன்  
-------மதிஞானம் உடையோர் உரைப்பீர் !




8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒருவர் மனது ஒன்பதைய்யா! அதில்
    ஒளிந்து கிடப்பது எண்பதைய்யா!!

    ReplyDelete
  3. Nice wish 👍

    ReplyDelete
  4. நாயை கண்டு பிடிக்க வழி உண்டு. மனிதனை கண்டு பிடிக்க முடியாதைய்யா.மனிதன் ஆறாவது அறிவைப் பயன் படுத்துவான்.

    ReplyDelete
  5. கவிஞர் பாடல் உதவிக்கு வருகிறது.
    போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே.
    முழு பாடலும் ரமேஷஷுக்கு கை கொடுக்கிறது.

    ReplyDelete