Search This Blog

Mar 31, 2022

பிரதோஷப் பாடல் - 45

 பிரதோஷப் பாடல் - 45

இந்த மாதம் 29-ம் தேதி பிரதோஷ தினத்தன்று எழுதிப்  பதிக்க மறந்த பாடல் இது.

கிட்டத்தட்ட மூன்று மாத இடை வெளிக்குப் பின் ஒரு பாடலை இயற்றிப் பதிவு செய்கின்றேன் .

அன்புடன் 

ரமேஷ் 



அர்த்தநாரீஸ்வரர் 

 


அம்புலியைத் தன்சிரத்தி லேவைத்த ஈசனை 

அம்பலத்தில் நடமாடும் நீள்சடைக் கேசனை 

அம்பிகைக்கு தன்னுடலில் பங்களித்த தேசனை 

அம்பைய்த காமனை எரித்தகை லாசனை 

நம்பியே மனதிருத்தி செய்திடுவோம் பூசனை!