Search This Blog

Oct 30, 2022

முருகனை எண்ணுவோம்.!

 முருகனை "எண்ணு"வோம்.!

இன்று சூரசம்ஹாரம். இந்த நாளன்று சில வருடங்களுக்கு முன் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் - சிறு திருத்தங்களுடனும் , ஒலி வடிவ இணைப்போடும் .

அனைவரும் படித்து முருகனருள் பெறுக!

அன்புடன் 

ரமேஷ் 



முருகனை "எண்ணு"வோம்.!


ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே  வானையை            #1*2                  
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்  
ஈரிரண்டு#  நால்வேதத்  துட்பொருளை உணர்ந்தபின்    #2*2
பிரணவத்தை   ஈசர்க்கு  போதித்தவன் 

 
மூவிரண்^  டாறான முறுவல் முகங்களுடன்                  ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^  எண்திக்கும் அரக்கரை  அழித்திடவே       ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

 
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும்      ^5*2                     
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^  பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு    ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
  
ஏழிரண்டு^  பதினான்கு  இரவுகள்  வளர்ந்திட்ட             ^ 7*2     
முழுமதியைப்  பழித்திடும்  வதனத்தினன்.
எட்டிரண்டு^  பதினாறு செல்வமும்  சிறப்புடன்              ^  8*2
கிட்டிடும்   குமரனைத்  துதிப்பவர்க்கே.

சித்தர்க ளீரொன்ப தில்^மூத்த  அகத்தியர்க்கு               ^ 9*2
சத்தான முத்தமிழைப்  போதித்தவன்.
ஐம்பூதம் ஐம்பிராணன் ஐம்புலன் ஐம்பொறியிவ் 
விருவத்தையும்^   இங்கு உருவித்தவன்                            ^ 10*2
                          
எண்கணக்கி  லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி 
பண்புனைந்  துன்புகழ்  பாடினேனே!
என்கணக்கு  இப்பிறவி. யில்முடியு  முன்னமே
எனையாண்டு  அருள்புரிவாய்  குமரவேளே!

 





 
பத்து இரு    

14 comments: