Search This Blog

Oct 22, 2022

பிரதோஷப் பாடல் - 47

 பிரதோஷப் பாடல் - 47


இன்றைய பிரதோஷப் பாடல். 

கீழ்க்கண்ட படத்தின் உந்துதலால் எழுந்தது!  

பிரதோஷத்தன்று, நந்தியின் கொம்பினிடைவழியாக இறைவனை  தரிசித்து, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை உரைத்தோமாயின், அப்பிரார்தனைகள் நிறைவேறும் என்று கூறுவர். 

இது குறித்த ஒரு சிறு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 







அந்தி வேளை *வந்து கோயில் 
-----ஈசன் சந்தி** முந்தியே 
குந்தி^ யுள்ள நந்திபின்னே 
-----நிந்து# அந்த நந்தியின் 
காதில் நமது விரும்புதலை  
-----ஓதி வேண்டி வணங்கிடின்
ஆதிசிவன் அவன் அருளால் 
-----அவை அனைத்தும் கிட்டிடும்


வந்து கோயில் = கோவில் வந்து 
** சந்தி = சன்னதி  
^ குந்தி = கால் மடித்து அமர்ந்திருத்தல் 
நிந்து= நின்று 



4 comments: