Search This Blog

May 27, 2018

பிரதோஷப் பாடல்- 7

பிரதோஷப் பாடல்- 7

இன்றைய பிரதோஷப்பாடலை இறைவன் அடிகளிலே படைக்கிறேன் - அதை பற்றிய கதைச் சுருக்கத்தோடு !

அன்புடன்

ரமேஷ்



அரிமாவுக்  கஞ்சியதால் மரமேறிய வேடனுமே 
இரவுறக்கம் துறந்திடவே விலுவத்தின் இலைபறித்து 
தருவினடி அரன்சிலைமேல் எறிந்தேநல்  அபிடேகம் 
கருதாமல் செய்தாலும் கைலாயம் சென்றடைந்தான். 


A hunter chased by a lion, climbed up a vilva tree to escape from it. Unable to  come down as the lion kept vigil under the tree waiting for him to come down, the hunter, to prevent himself 
from dozing off and falling  down from the tree , started plucking the leaves from the tree and was dropping them down. There was a Sivalingam under the tree and the vilva leaves kept falling on them! As a result, though the 'Abhishekam / Archanai " was performed by the hunter, without his really meaning to do so, yet he attained Moksha . 

சிங்கம் ஒன்று துரத்தியதால் பயந்தோடிய வேடன் ஒருவன், அதனிடமிருந்து தப்ப ஒரு  வில்வ மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொண்டான். சிங்கமோ, அவன் இறங்கி வருவான் என்று எதிர்பார்த்து மரந்தடியிலே காத்திருந்தது. இரவில் தூங்கிவிட்டால் கீழே  விழுந்து சிங்கத்திற்கு இரையாகிவிடுமோவென அஞ்சிய வேடன், தான் உறங்காது நேரம் கழிக்க  , மரத்தின் இலைகளைப்  பறித்து கீழே போட்டவாறு இரவைக் கழித்தான். அந்த வில்வ இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தவாறு இருந்தன! இவ்வாறு, தன்னை அறியாமலே செய்த அர்ச்சனையின் பயனாக, அவ்வேடன் கைலாயம் சென்றடைந்தான்.

1 comment:

  1. ன்இது நடந்தது ஒரு சிவராத்திரி அன்று.ஆகவேதான் சிவராதரி நித்திரை களைந்தால் மோட்சம் என கூற்று

    ReplyDelete