Search This Blog

Jul 14, 2021

On Inernational Kissing Day


Types of Kisses - there are many

And I'm not an expert in those any

But let me have my little say

On this Special World Kissing Day!


Some are given in the dark

Behind the bushes in the park.

Though these kisses are clandestine 

In spirit and deed pure and pristine.


Some kisses make nary a sound

Still make your hearts go 'pound -pound -pound' !

Some do make a lot of noise- Well  

To Each and every one his choice


Some say it with a flower single

With  Kisses that make your lips tingle

Some Kisses are  techtonic

While some others are Platonic!


The Kiss on the head your parents plant

Putting a price on it? No, You can"t !

The kiss you plant on your wife's forehead

Brings memories of the days courted!


The Kisses you give your children Grand

They sure belong to a different brand.

Hugging them with moist eyes

Can life give you a better prize?


Lovers, parents and friends for long

To whichever group you may belong

Blow them a Kiss and have your say

On Inter National Kissing Day.











Jul 7, 2021

முத்தத் திருநாள்

முத்தத் திருநாள்

நேற்று அனைத்துலக முத்தத் திருநாள் - International Kissing Day!

ஒருநாள் தாமதமாக எழுதிப்  பதிக்கிறேன்!

ஆனால் என்ன? முத்தம் இனிக்காமலா போகும்?

அன்புடன் 

ரமேஷ் 


முத்தத் திருநாள் 





மொத்தஉலக நாடுகளுமே முத்ததினம் கொண்டா  டிய நாள் 

நேற்றுதான் என்பதை நானும்   இன்றுதான்  நினைவில் கொண்டேன்.

மெத்தனமாய் இருந்த தாலே  மொத்தமாய் மறந்து போனேன்.


முத்தங்கள் பற்பல வகையாம்; அளிப்பதே தனியோர் கலையாம்!

அத்தனை பற்றியும் நானே அறிகிலேன் எனினும் கூட 

எத்தனம் இங்கு செய்வேன் அவைகளைப் பட்டிய  லிடவே!


சத்தமே சற்றும் இன்றி கன்னத்தில் இதழைப் பதித்து 

மற்றவர் அறியா வண்ணம் அளித்திடும் முத்தம் ஒன்று!

இச்சையை எவர்க்கும் இங்கே மறைக்காது கன்னக் கதுப்பில் 

இச்சென்ற சத்தத்தோடு பதித்திடும் முத்தம் ஒன்று!

ஒத்தை ரோசா மலரை காதலியின் கூந்தலில்  சூட்டி 

பத்துப் பதினோரு முத்தம் பதிப்பதும் இதழில் உண்டு!


அன்புடன் தலையை வருடி பெற்றவர் பாசத்தோடு 

சென்னியை முகர்ந்தளிக்கும் உன்னத முத்தம் ஒன்று !

என்றுமே நம்மைப் பிரியா திணைந்துநடை போடும் இல்லாள் 

நெற்றியை நுகர்ந்து நாமும் அளித்திடும் முத்தம் ஒன்று!

பேரனை பெயர்த்தி களையும் சேர்த்தணைத்துக் கரங்களில் எடுத்து 

ஈரத்தில் கண்கள் நனைய இட்டிடும் முத்தம் ஒன்று!


எவ்வகையைச் சார்ந்தது எனினும் ஏதோவொரு வகையின் முத்தம்  

செவ்வையாய் பிறருக் களித்து முத்தநாள் கொண்டா டிடுவோம்!

முத்தநாள் முந்தைய நாளே  முடிந்தே போனால் என்ன?

முதலோடு வட்டியும் சேர்த்து இதமாக அளிப்போம் இன்றே!





பிரதோஷப் பாடல் - 40

 பிரதோஷப் பாடல் - 40

இன்றைய பிரதோஷப் பாடலுடன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலத்தைப் பற்றிய வரலாறையும் கொடுத்திருக்கிறேன்.

அன்புடன் 

இரமேஷ் 



ஏமகூட* மேருமலையை வில்லாய் வளைத்தவன் 

வாமபாக தேகமீதில் தேவியைத் தரித்தவன் 

காமநாசன் ஆமிரேசன்** பேரைப்பாடி வணங்கிடும் 

பாமரற்கும் சேமகாலம் ஆமளவும்*** அளிப்பனே 

 

* ஏமகூடம்= மேருமலை 

** ஆமிரேசன்= மாமரத்தினடியில் அமர்ந்துள்ள ஈசன் 

*** ஆமளவும் = எப்பொதும் , கூடிய விரைவில் 

"eka" means one and "amaram" means mangoe tree. Legend has it that Parvathi was sitting under the mangoe tree in the temple and was performing penance. Wanting to test her, Lord shiva, directed fire at her. Parvathi took the help of Vishnu, who colled the fire using the rays of the moon. Then Shiva sent the river Ganga but Parvathi convinced her that both of them were sisters and that she should not disturb her penance. After completing her penance, Parvathi was united with Shiva. 

Jul 5, 2021

தங்க மங்கை


தங்க மங்கை 

SPIC நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த திரு. அமானுல்லா பதித்த ஒரு காணொளிப் பதிவிலுருந்து எடுக்கப்பட்ட படம் இது!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் எடுக்கப்பட்டது.

இதைப் பற்றி ஒரு கவிதை - அவர்  கேட்டுக்கொண்டபடி !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கச் சுரங்கம் ஒன்றைத் 
-----தேடியே  வெட்டி எடுத்து 
துங்கம்* செய்த தங்கத்தில்                              
-----அங்கியொன்றை அழகாய்ச் செய்து 
தொங்கலுடன்** தலையில் தொப்பி             
-----முன்கைக்கோர் காப்புறை என்று 
அங்கங்கே அங்கங்கள் மேலே 
----ஆபரண மணிந்தாள் மங்கை!

அங்கங்கள் முழுதும் அவளே 
-----தங்கத்தால் மறைத்திருந் தாலும் 
தங்கத்தை மிஞ்சும் அவளின் 
-----முழுமுகச் சிரிப்பே ஒளிரும்!
மங்கிடும் தங்கத்  தொளியும்  
-----மெருகேற்ற வில்லை என்றால்! 
மங்காது இவள்முகத் தொளியே! 
-----இங்கிதற் கிணையும் இலையே !! 

*துங்கம்=பரிசுத்தம்
** தொங்கல் = காதில் அணியும் அணி 

Jun 29, 2021

இதழ் விரிக்கும் மலர் மொட்டு


இதழ் விரிக்கும் மலர் மொட்டு

என்னுடைய கல்லூரி நண்பர் வரதராஜன் அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையை  மொழி பெயர்த்து நான் எழுதியது இந்தக் கவிதை. 

மூலம் - சுபி கவிஞர் ஜலாலுதீன் ருமி.

படம்:  Getty Images யிலுருந்து , நன்றியுடன் 

அன்புடன் 

ரமேஷ் 


இதழ் விரிக்கும் மலர் மொட்டு 






கடவுள் படைத்த ரோஜா மொட்டை  

எடுத்துக் கையில் அன்புடன் அணைத்து 

தடவிக் கொடுத்து இதழைப் பிரிக்க 

முயன்றேன் ஆனால் முடிய வில்லையே!


மெதுவாய்ப் பதமாய் தொட்ட போதிலும் 

இதழ்கள்  கீழே உதிர்ந்து விழுந்தன!

மொட்டின் மலரிதழ் விரியச் செய்யும் 

மருமம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


மொட்டின் இதழை விரிக்கும் செயலே 

என்னால் இங்கு இயலா திருக்கையில் , 

முன்னால் விரியுமென்  வாழ்க்கையின்  மருமம் 

ஆராய்ந் தறிதல் எங்கனம் இயலும்?


ஒட்டி இருந்த மொட்டின் இதழ்களின்  

கட்டை அவிழ்த்து மலரச் செய்தவன் 

வருகிற வாழ்க்கைத் தருண மனைத்தையும்  

பிரித்துப் பின்னே  மலரச் செய்வான் 


கண்முன் தெரியும் வாழ்க்கைப் பாதையின் 

மருமம் அனைத்தும் அறிந்தவன் அவனே!

நண்பனாய் அவனை நம்பி நடந்தால் 

நலனே என்றும் நடக்கும் என்றறிவோம்.






Jun 26, 2021

வெள்ளம்

There was a time when rivers were flowing under the bridges.
Now a days only the traffic flows over the bridge - the rivers under the bridges have dried!

 வெள்ளம்


அன்று                         

                                                     
ஆற்றில் வெள்ளம் பெருகிய நாளில் 
மறுகரை செல்ல பாலம் அமைத்தோம். 
 
இன்று                                                                                   


பாலத்தின் மேலே  மக்கள் வெள்ளம் 
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!


Jun 24, 2021

செய்திப் பரிமாற்றங்கள்

செய்திப் பரிமாற்றங்கள்

ஊரடைப்புத் தடைகளால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் இடைவிடாமல் அவர்கள் செய்துகொள்ளும் குறுஞ்செய்திப்  பரிமாற்றம் ஒன் உதவுகிறது. என்றாலும் நேருக்கு நேராக அவள் விழியால் செய்யும் செய்திப் பரிமாற்றத்திற்கு அவை இணையாகுமா?





மின்காந்த அலைமூலம் தொலைபேசிச் செய்திகளை

அன்பார்ந்த காதலியே,  அன்றாடம் அனுப்புகிறாய் .

என்றாலும் அவையெல்லாம் நேர்நோக்கும் உன்காந்தக்

கண்பார்வைக் கில்லை இணை!

பின் குறிப்பு :

என்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!


மின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை

அன்பார்ந்த காதலியே, நாள்தோரும்  நீபகிர்வாய்

என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்

 குண்டோ யிணையிங்கே சொல்!

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)