Search This Blog

Apr 13, 2023

சோபக்ருது ஆண்டு வரவு

சோபக்ருது ஆண்டு வரவு 




இன்று  முடியுமிந்  நற்செயல் ஆண்டில்*                * நற்செயல் ஆண்டு = சுபக்கிரிது 

நாமே   விதைத்த நற்செயல் விதைகள் 

நன்றாய்  வளர்ந்திம் மங்கள ஆண்டில்*         * மங்கல ஆண்டு = சோபகிருது 

நலம்பல நல்கிட வாழ்த்துகள் உரைப்பேன் 


உக்ரேன்  ரஷ்யா இவர்களி னூடே 

நடக்கும் நீள்போர் நின்றிட வாழ்த்து- (நம்) 

பக்கத்துக்கு நாட்டினர் அக்கிரமச் செயல்கள் 

அடங்கியே  அமைதி நிலவிட வாழ்த்து  


உரு பல மாறிடும் கிருமிக் கூட்டம் 

மறுபடி நம்மைத் தாக்கா திருக்கவும் 

முகத்தையும் மூக்கையும் மூடித் திரியும் 

நிகழ்வு நேராது  இருக்கவும்  வாழ்த்து 


இந்திய நாட்டின் தலைமையில் இங்கு  

இருபது நாட்டினர் இணைந் துரையாடி  

செந்நெறி முறைகள் சீர்திருத் தங்கள்  

சிறப்பாய் செய்து முடித்திட வாழ்த்து 


உலகம் எங்கும்  பொருளா தார

வளர்ச்சிகள் குன்றி வருந்திடும்  போதும்

கலக்கம் இன்றி நம்திரு நாடுதன்  

இலக்கை எட்டி அடைந்திட வாழ்த்து. 


அரிசி கோதுமை மட்டும் விளைத்து 

அறுவடை செய்வதை இனிமேல் விடுத்து 

சிறுதா னியங்கள் சோளம் கம்பு 

இவற்றையும்  விளைத்து சிறப்புற வாழ்த்து  



கருநா டகத்தில் கனமழை பொழிந்து 

காவிரி கரைபுரண் டோடிட வாழ்த்து 

வருடா வருடம் இருநாட் டவர்க்கும் **       **இருநாடு = கர்நாடகம்,தமிழ்நாடு  

நடக்கும் நீர்ப்போர் நின்றிட வாழ்த்து


பிரிகேடு ஏரிக் கரைக்குடி யிருப்பில்*                            * Brigade Lake Front

தெருநாய்த் தொல்லை தொலைந்திட வாழ்த்து 

*மெட்ரோ ரயிலின் தடத்தினில்  உள்ள   

இடைவெளி நீங்கி நிறைவுற  வாழ்த்து                       * The gap between KRpuram and Baipanahalli

 

நான் 

உரைத்திடும் வாழ்த்துகள் பலவெனினும் அதை 

நிறைத்தலும் நீக்கலும் அவன் திரு வருளே!

குருபரன் பழனிக் குன்றினில் உறையும் 

இறைவனை வணங்கி வேண்டிடு வோமே!


 

 



  


Apr 4, 2023

A SCENE AT THE SEA-SHORE

 A SCENE AT THE SEA-SHORE

Sometime ago, I had written and published in my Blog, a Tamil poem about my walk on the sea-shore along with my little Grand Daughter. 

 (https://kanithottam.blogspot.com/2021/01/blog-post_17.html) . 

My eldest Grand Daughter had asked if there was an English version of the poem. As I did not want to disappoint her, I translated it, in the form of an English Poem! Here it is, for your reading pleasure!

V.Ramesh


A SCENE AT THE SEA-SHORE



The Sea-waves wearing     a Silver Crown

Caress the sandy     shores of brown

Cool-wind over     my body blows

Finding its way     through layers of clothes

The warm sunrays     from the big blue sky

To some extent,     does the cold nullify

The clouds are spraying     little droplets

Wetting my clothes     and the sand carpet

The feel of the raindrops     falling on my face

Fills my mind with     Joy and Peace.

 

When I am standing      still on the shore

Small waves come     to caress my feet

The Strong Big waves     come rushing at me

and they chase me back     and I retreat!

As the waves recede,     into to the Sea

They burrow a pit,     below my feet!

As the sand gets pulled     from under my toes

I feel it causing a     tickle in my sole!

 

I walk for a while     with my Grand daughter

Holding her small little     hands in mine,

Savoring the glory of the     morning Sun,

As he rises from the sea,     on the ease sky-line.

When the rays of the Sun     and the wave crests meet

The whole sea turns     into a  silver plate.

 

We walk on the shore,     leaving footprints on the sand

And the play of the waves     won't let them long stand.

But the picture of the Sun     and the shimmering silver sea

Will stay in my heart,     etched in memory!

 

 

Mar 30, 2023

இராம நவமிப் பாடல்

இராம நவமிப் பாடல் 

இன்று ராமநவமி ! ராமபிரானின் அருள் வேண்டி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 


கானகம் சென்றுதன் தந்தைசொல் காத்தானை, 


வானரச்   சேனைகளின்  துணையோடு சமர்செய்து  

தானவரைக்*  கொன்றழித்து தருமத்தை நிலைநாட்டி         *தானவர்=அரக்கர் 

சானகனின்*  திருமகளை சிறைமீட்டு வந்தானை,                  * சனகன் 


வானகத்  துறைதேவர் வணங்கித் தொழுவானை, 


நானிலமும் போற்றவிந்  நவமித் திருநாளில் 

மானவனாய்*  இந்த மண்ணில் பிறந்தானை,                             * மானவன்= மனிதன் 




நானகத்திலே இருத்தி நவமியிந்   நன்னாளில் 

பானகமும் மோர்நீரும் படைத்தே பணிந்திடுவேன் 

ஞானமெனை  அடைந்து சேர.



  


  


 

 


Mar 29, 2023

ஸ்ரீராமநவமி

நாளை  ஸ்ரீராமநவமி.

இந்த நாளையொட்டி இரு சிறு பாடல்கள் 

அன்புடன் 

ரமேஷ் 



 
பெற்றவன்  சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே ! 

ஒரு விகற்ப நேரிசை வெண்பா )




இலக்குமியின் மலர்க்கரம்     பற்றி அவள் இடப்புறம்.
இளையநம்பி இலக்குவன்     இருப்பதவன்  வலப்புறம். 
இலக்கென்றும்   இழக்காத     கோதண்டம் தோளிலே. 
இலங்கையை எரித்திட்ட      அனுமந்தன் தாளிலே. 
வலக்கையை உயர்த்தியே   வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும்     ஸ்ரீராமன் தரிசனம்.



Jan 17, 2023

பூரி ஜகன்னாதர்

பூரி ஜகன்னாதர் 

சென்ற மாதம் 50 PLUS VOYAGERS என்ற நிறுவனத்தாரால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுலாப் பயணத்தில் நானும் என் மனைவியும் பங்கேற்றோம். ஆறு நாட்கள் பயணித்து ஒரிசா மாநிலத்தின் பல இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் ஒன்று புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோயில்.

சாதாரணமாக எல்லா கோவில்களிலும், கடவுளர்கள் தத்தம் மனைவியருடனே சேர்ந்திருந்து அருள்பாலிப்பதையே  ( சிவன்-பார்வதி, விஷ்ணு-லட்சுமி, முருகன்-வள்ளி,தெய்வானை ) பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக்கோவிலிலே ஒரு வித்தியாசமாக மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவுடன் சேர்ந்து தரிசனம் தராமல் , தனது சகோதரன் பலராமனோடும், சகோதரி சுபத்திரையுடனும் சேர்ந்து தரிசனம் தருகிறார்! இதன் தாத்பரியம் சரியாகப் புரியவில்லை! தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்!

கூடப் பிறந்தோருடன் கண்ணன் தரிசனம் தருவதை பற்றி ஒரு சிறு பாடல், வெண்பா வடிவில்!

அன்புடன் ரமேஷ் 




தன்னுதிரத் தோடுதித்த  தங்கை தமையனையும்

தன்னுடனே கர்ப்ப கிரஹத்தில் கூட்டிவைத்து 

கண்ணனவன் காட்சிதரும் மாட்சியினைப் பெற்றதுவாம் 

மன்னுபுகழ் பூரித் தலம் 


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


Dec 27, 2022

கடலோரக் காட்சி

 

கடலோரக் காட்சி 

நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட படம். அது பற்றி ஒரு பாடல்.

இப்பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.

அன்புடன் 

ரமேஷ் 





அரவம் இன்றி இரவின் மடியில் 

-----இன்னும் உறங்கும் நகரங்கள் 

இருளைப் பிளந்து கண்கள் சிமிட்டும் 

-----தெரு ஓரத்து மின்மினிகள் 

சிறிதே வெளுத்து சாம்பல் நிறத்தில்

-----சிற்றலை ததும்பும் சமுத்திரங்கள் 

அருணன் வரவை மறைக்கும் சிறுதிரை 

-----அரைச் சாம்பல்நிற மேகங்கள் 

பிறிதோர் காலை அரும்புமித் தருணம் 

-----செந்நிறச் சாயலில் ஒளிர்வானம் 

பரிதியின் கதிர்முழு வான்நிறைக்  கும்வரை  

-----மேலே மிதக்கும் மேகங்கள் 

தரிசனம் செய்ய இக்காட்சியின் அழகை 

-----இவ்விரு கண்கள் போதாதே  

Dec 22, 2022

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை 


இந்த மார்கழித் திங்களன்று அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கக்  கூறும் ஒரு சிறு பாடல் - தமிழ் வாக்கிய வடிவமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளின் -  (எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை ) --சிலேடைப்  பயன்பாட்டுடன் !

அன்புடன் 

ரமேஷ் 





எழுமின் திசை*யில் கதிரவன் எழுமுன் 

எழுவாய் தினமுமிம் மார்கழி மாதம். 

குழுவாய்க் கோவில் சென்றே தொழுவாய்  

குழலூ திடுவோன் கண்ணன் கழலை. 


வியலகம்** வாழும் உயிர்நிலை அனைத்தும் 

உயர்நிலை அடைய வணங்கித்  ^^ துதித்தல் 

செயப்படு(ம்) பொருளை பாடுதல் அன்றி 

அயலுரை*** யேதும் பயனிலை,  இலையே !


எழுமின் திசை = கிழக்கு 

** வியலகம் = பூமி 

*** அயலுரை = பிற பேச்சுகள் 

^^  துதித்தல் செயப்படு(ம்) பொருள் = துதிக்கப்படும் இறைவன்