Search This Blog

Mar 30, 2023

இராம நவமிப் பாடல்

இராம நவமிப் பாடல் 

இன்று ராமநவமி ! ராமபிரானின் அருள் வேண்டி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 


கானகம் சென்றுதன் தந்தைசொல் காத்தானை, 


வானரச்   சேனைகளின்  துணையோடு சமர்செய்து  

தானவரைக்*  கொன்றழித்து தருமத்தை நிலைநாட்டி         *தானவர்=அரக்கர் 

சானகனின்*  திருமகளை சிறைமீட்டு வந்தானை,                  * சனகன் 


வானகத்  துறைதேவர் வணங்கித் தொழுவானை, 


நானிலமும் போற்றவிந்  நவமித் திருநாளில் 

மானவனாய்*  இந்த மண்ணில் பிறந்தானை,                             * மானவன்= மனிதன் 




நானகத்திலே இருத்தி நவமியிந்   நன்னாளில் 

பானகமும் மோர்நீரும் படைத்தே பணிந்திடுவேன் 

ஞானமெனை  அடைந்து சேர.



  


  


 

 


6 comments:

  1. Ramesh, Very elegant and simple poem of Ramayanam in a condensed form.
    Ramani.

    ReplyDelete
  2. Lovely! Complete Ramayanam in nutshell.

    ReplyDelete
  3. எதுகையோடு விளையாடி விட்டாய்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி, நண்பா!

      Delete