Search This Blog

Dec 22, 2022

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை 


இந்த மார்கழித் திங்களன்று அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கக்  கூறும் ஒரு சிறு பாடல் - தமிழ் வாக்கிய வடிவமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளின் -  (எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை ) --சிலேடைப்  பயன்பாட்டுடன் !

அன்புடன் 

ரமேஷ் 





எழுமின் திசை*யில் கதிரவன் எழுமுன் 

எழுவாய் தினமுமிம் மார்கழி மாதம். 

குழுவாய்க் கோவில் சென்றே தொழுவாய்  

குழலூ திடுவோன் கண்ணன் கழலை. 


வியலகம்** வாழும் உயிர்நிலை அனைத்தும் 

உயர்நிலை அடைய வணங்கித்  ^^ துதித்தல் 

செயப்படு(ம்) பொருளை பாடுதல் அன்றி 

அயலுரை*** யேதும் பயனிலை,  இலையே !


எழுமின் திசை = கிழக்கு 

** வியலகம் = பூமி 

*** அயலுரை = பிற பேச்சுகள் 

^^  துதித்தல் செயப்படு(ம்) பொருள் = துதிக்கப்படும் இறைவன் 

2 comments:

  1. Very simple and elegant poem for Margazhi month !
    The essence of Thiruppavai!
    Ramani.

    ReplyDelete
  2. Very good advice 👍

    ReplyDelete