கைபேசி
இன்று நம் எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று கைபேசி. அது இல்லாமல் இன்று, அதுவும் இந்த கோவிட் காலத்தில், உலகம் இயங்காது என்ற ஒரு நிலைமை. இருந்தாலும், யாராவது அதைக் கண்டு பிடித்தவர் யாரென்று நினைவில் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற காவல் துறைத் தலைவர் அதிகாரி திரு.ராஜ்மோகன் அவரை இன்று நினைவு கூறுகிறார்!
சில வருடங்களுக்கு முன் கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை என்ற தலைப்பில் திரு.ராஜ்மோகன் அவர்கள் செய்து வரும் பணியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.* இன்று அப்பலகையில் இடம் பெற்றிருப்பவர் "மார்ட்டின் கூப்பர் " என்பவர். இன்றைய கைபேசிக்கான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து, முதல் கைபேசியையும் வடிவமைத்தவர் கூப்பர். இன்று 92 வயதை அடையும் இந்த விஞ்ஞானியை நினைவு கூர்ந்து, அவரை வாழ்த்துகிறார் ராஜ்மோகன்!
நானும் அவருடன் இணைந்து ஒரு சிறிய பாடல் இயற்றி மார்ட்டின் கூப்பரை வாழ்த்துகிறேன்!
அன்புடன்
ரமேஷ்
* http://kanithottam.blogspot.com/2017/08/blog-post_10.html
இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும்
தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட
விடையொன்று கண்டார் விஞ்ஞானி கூப்பர்.
நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!