Search This Blog

Apr 7, 2026

குதத்தில் நுழைத்த கம்பு

 இன்றைய நாளிதழில் ஒரு தலைப்புச் செய்தி -



2020 ஆம் ஆண்டு நாடுமுழுதும் கோவிட் தாக்கத்தால் துயருற்றிருந்த நேரம்.  எல்லாக் கடைகளும் இரவு 9 மணிக்குள் மூடப்படவேண்டும் என்ற தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை மூடவில்லை என்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட தந்தை, அவரைக் காணச் சென்ற மகன்,  இருவரும், காவல் நிலையத்தில் மிகக் கொடூரமாக,  மலவாயில் கம்பை நுழைத்துத்  தாக்கப்பட்டு,  இறந்தார்கள். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

நாட்டையே அன்று உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அன்று நான் பதிவிட்ட பாடலை  இன்று நினைவு கொள்கிறேன்  -- இனியேனும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது குறையும் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன் 

ரமேஷ்


கோவில்பட்டிக்  கொடூரங்கள்

குறிப்பிடப்பட்ட நேரத்தில் கடையடைப்புச் செய்யவில்லை என்ற காரணத்திற்காகக் கோவில்பட்டியில்  கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தந்தை, அவரைக் காண காவல் நிலையம் சென்றிருந்த - மகன், இருவரும் காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸுக்கு  நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டுகிறார்களோ?

ரமேஷ் 



விதம்விதமாய்  வதைசெய்து பதம்பார்க்கும் முறைகளிலே  
முதலிடத்தை அடைந்துள்ள கோவில்பட்டிக் காவலர்க்கு 
புதியவொரு இலச்சினையை* பதிவிடுவோம் அதுவேயோர் 
குதத்தில் நுழைத்த கம்பு.  

* இலச்சினை= LOGO





3 comments:

  1. It is really a watershed verdict against rowdy police men

    ReplyDelete
  2. Apt lines... actually these police goons deserve ' Kazhuviletrum' punishment..

    ReplyDelete
  3. Can this Judgement will be implemented. They can go for three four appeal & get interim bail & lead normal life & final verdict will take long time . Any how your posting is nice & fine .

    ReplyDelete