Search This Blog

Sep 12, 2024

நான் வசிக்கும் குடியிருப்பில் இருக்கும் நண்பரது மகளின் வளைகாப்பு , சீமந்த விழாக்களில் கலந்து கொள்கையில் எழுதிய பாடல்கள்! நண்பருடனும் அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொண்டேன்! 

எனது கனித்தோட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் நிறைவு குறித்து பதிவு செய்கிறேன். பதிப்பிற்கு  மட்டுமே!  பகிரவில்லை!

அன்புடன் 

ரமேஷ் 

வளைகாப்பன்று 


வளர்பிறையில் இந்நன்னாளில் அன்னையிவள் கருவறையில் 

வளர்கின்ற இளம்பிறையை  வரவேற்கும் முகமாக 

மங்களப் பெண்டிர் பலர் பிரியமுடன் அணிவகுத்து 

மங்கையிவள் தளிர்க்கரத்தில் வளையடுக்கும் நாளின்று  

எங்கள் இதயம்நிறை வாழ்த்து!


சீமந்தத்தன்று 


சீவிச் சிங்காரம் செய்து 

நன்பட்டில் ஆடை யுடித்தி 

 

பூவைத்து  பொட்டும் வைத்து 

பெண்ணவளை மணையில் ஏற்றி 


நாவிட்டு வேதியர்கள் 

நான்மறைநல் மந்திர மோதி 


நெய்விட்டு தீ வளர்த்து 

தேவியரின் அருளை  வேண்டி 


சீமந்தம்  காணும் பிரியா   

சீரும் சிறப்புடன் இருக்க

 

நாமிங்கு அனைவரும் கூடி 

நல்வாழ்த்துக் கூறிடு வோமே .




No comments:

Post a Comment