Search This Blog

Oct 18, 2023

நவராத்திரி- நான்காம் நாள்

நவராத்திரி- நான்காம் நாள் 

 




கருமையும் வெறுமையும் எங்கும் இருக்கையில்

இருளை நீக்கிய ஒளி அவளே 

அண்ட பேரண்டம் விண்மீன் மண்டலம் 

அனைத்தையும் ஆக்கிய அன்னையிவள் 

முகத்தில் பூத்த முறுவலின் மூலம் 

சகங்கள் அனைத்தையும் சிருஷ்டித்தாள் 

ஆதி சக்தியின் அம்ச மானவள் 

சோதி மயமாய் ஜொலித்திடுவாள்

மகா காளியுடன் மஹா லட்சுமி 

மகா சரஸ்வதி தேவியரை 

இடக்கண் வலக்கண் நெற்றிக் கண்களின் 

கடைக்கண் பார்வையால் படைத்திட்டாள் 

மிருகா திபதியாம்  அரிமா மீது 

அமர்ந்து அன்பர்க் கருள் புரிவாள்

சித்திகள் எட்டும் நிதிகள் ஒன்பதும் 

சித்திக்கும் அவள் அருளாலே 

பூசணிக் காயெனும் பொருளைக்  கொண்ட 

குசுமாண்டா எனும் தேவி இவள்

நான்காம் நாளின் நாயகி இவளை 

நோன்புகள் நோற்று  வணங்கிடுவோம். 

  

 

No comments:

Post a Comment