Search This Blog

Oct 17, 2023

நவராத்திரி - மூன்றாம் நாள்

 நவராத்திரி - மூன்றாம் நாள் 



திரிசூலம், செண்டு,வாள் கமண்டலங் களை 

-----இடப்பக்கக் கைகளிலே ஏந்தி இருப்பாள்.

விரிகமலம், ஜபமாலை, வில்லம்புடன் 

-----மணியொன்றைத் தாங்கிடுவாள்  வலக்கரங்க ளில்

பரிவிரக்கம் கருணை காட்டும்   வரதமுத்திரை 

-----  காட்டிடுவாள் அடியார்க்கோர் இடதுகரத் தால்

வருகின்ற அடியவரை அணைத்து அபயம் 

-----தருகின்ற முத்திரையோர் வலக்கரத் திலே.

வரிப்புலியை அரியணையாய் அமைத்து அதன்மேல் 

-----அமர்ந்து அருள் புரிந்திடுவாள் அனவரதமுமே 

 

நெற்றியிலே சொலிக்கின்ற பிறைச்  சந்திரன்- கூட 

-----வெற்றியொலி எழுப்பிகின்ற காண்டா மணி 

பெற்றதனால் சந்திரகண்டா என்னும்- பெயர்

----- கொண்டவளை நாள்மூன்றில்  கொண்டா டிடுவோம் 

 

No comments:

Post a Comment