Search This Blog

Oct 16, 2023

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்


இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்.இந்த நாளன்று தேவியைத்  துறவுக்கோலத்தில் வழிபடுவர். 

ஒருகையில் ருத்ராட்சத்திர மாலையை ஏந்தி, மறுகையில் கமண்டலத்துடன் , துறவைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சி தரும் தேவியை, பிரம்மச்சாரிணி என்றழைத்து வணங்குவர். 

இது பற்றி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: நவராத்திரியின் போது நாளுக்கொரு ஒரு பாடல் எழுதிப்  பதிக்க முயன்றாலும்,இந்த நவராத்திரிப் பாடல் பதிவு பற்றிய தகவலை   தினமும் எனது பகிர்வுப் பட்டியலில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதை,  தற்காலிமாக , இன்று முதல் நவராத்திரி முடியும் வரை, நிறுத்திக்கொள்கிறேன். பதிவை www.kanithottam.blogspot.com இணையத்தில் படிக்கலாம். நன்றி. 



 




துறவெனும் அறம்பூண்ட அடையாளமாய் 

(உ)ருத்ராட்சத் தவமாலை ஒருகையிலே!

மறுகையில் நீர்நிறைக் கண்டிகை*யுடன் 

அறவி**யரின் வெண்ணிற ஆடையுடுத்தாள்.

செறிவான ஓர்முகச் சிந்தனையுடன் 

பிரம்மத்தை மனதிருத்தி தவம்செய்வதால் 

ப்ரம்மச்  சாரிணியாய்ப்  பெயர்கொண்டவள்.

இரண்டாம் நாளின்று  இவளையெண்ணி 

கரும வினையனைத்தும் களைவதற்கு  

சரணடை வோம்திருப்  பாதங்களில்.

* கண்டிகை = கமண்டலம் 

** அறவி = பெண் துறவி 



2 comments: