Search This Blog

Oct 20, 2023

நவராத்திரி- ஐந்தாம் நாள்

நவராத்திரி- ஐந்தாம் நாள் 



தான்கொடுத்த வேலெடுத்து தாரகனைக் கொன்று 

வான்புகழை வென்றமகன்  கந்தனது பெயரியினையே  

தன்பெயரின் முன்னாலே  சேர்த்துவைத்து  மகிழ்ந்தவளே  

ஐந்தாம்நாள் அருள்புரிவாள்   ஸ்கந்தத்தாய் வடிவத்தில்.


தொண்டாற்றும் அடியார்க்கு அருள்கின்ற  கரமொன்று 

வண்டூரும் கமலமலர் ஏற்றிருக்கும்  கரமிரண்டு

கண்டோர்க்கு தாயன்பை தெரிவிக்கும் முகமாக 

தன்மகனை மடியிருத்தி அணைக்கின்ற கரமொன்று 


சிங்கமொன்றின் மேலமர்ந்து சங்கடங்கள் தீர்ப்பவளை 

பங்கயத்தின் மேலமர்ந்து* மங்களங்கள் தருபவளை 

இங்குமங்கும் பாயும்மனம்  தங்கவைக்கும் தூயவளை 

சங்கரனின்  மனைவி(ஸ்)கந்தத் தாயினையே  வணங்கிடுவோம்.


பங்கயத்தின் மேலமர்ந்து* =ஸ்கந்தமாதாவை தாமரை மேலமர்ந்திருக்கும் பத்மலட்சுமி ஆகவும் சித்தரிப்பது உண்டு,

  








   

 

No comments:

Post a Comment