Search This Blog

May 24, 2021

பிரதோஷப் பாடல் - 38


பிரதோஷப் பாடல் - 38


உண்ணுதலும்,  உண்டுப்பின்  உறங்குவதும்,   தினந்தினமும்

உண்டியலின்  பொற்காசை  எண்ணுவதும்,   இச்செயல்கள்  

பண்ணுதலே  இப்பிறப்பின்  பயனென்று  எண்ணாமல் 

கண்ணுதலின்  கனலாலே   காமனை  எரித்தானை 

தண்புனலாள்  கங்கையினைத்  தலையில்  தரித்தானை 

எண்குணத்தான்  ஈசன்  எம்மானை  மனதிருத்தி 

எண்ணுவதே  நாளும்  நலம்!


அன்புடன் 

ரமேஷ் 


7 comments:

  1. அருமையான பிரதோஷப் பாடல்.👌👌

    ReplyDelete
  2. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வேலாயுதம்May 25, 2021 at 11:57 AM

    மிக அருமை ரமேஷ். இறைவனே மயங்கும் இனிமை

    ReplyDelete