Search This Blog

Jun 24, 2020

இடுக்கண் வருங்கால்- எனது பதில்

இடுக்கண் வருங்கால்- எனது பதில் 

இடுக்கண் வருங்கால் ------ என்ற தலைப்பில் நான் பதித்த கவிதை மிக்க எதிர்மறைக் கருத்துக் கொண்டதாகவும், மிகுந்த மன அழுத்தத்தை விளைவிப்பதாகவும் இருப்பதாக சிலர் கருத்துத் தெரிவித்து இருந்தனர். 
அதற்கு பதில் சொல்லும் முறையில் எதை எழுதினேன். சம்பத்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியிருக்கிறேன். இதை மற்றோருக்கு அனுப்புவதாக இல்லை. 
என்றாலும், முழுமை கருதி இந்த blog - இல் இணைத்திருக்கிறேன். 


கருத்துக்கு நன்றி! வருத்தங்கள் வேண்டாம்.
நெருப்பென்று  சொன்னால் நா சுடுவதில்லை!
திருந்தாமல் திரிகின்ற மனிதற்கோர் பாடம்
சிரிப்புடன் சேர்த்து சொல்லவே முயன்றேன்!
கருப்பு நகைச்சுவையின் குறிக்கோளும்  அதுவே!
விருப்புடன் பலரும் விரும்பிப் படித்து
நேர்மறைக் கருத்துகள் பலவும் நிறைத்து 
வேறுபல பாடல்கள்  தரவும்  முனைவேன்

No comments:

Post a Comment