Search This Blog

Mar 2, 2020

குறுந்தொகை - 279

குறுந்தொகை - 279

இந்தக்கால  இளம் பெண் ஒருத்தியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவளது பெற்றோர் 
வெளியே  சென்றிருக்கிறார்கள்,
,அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்.
அப்போது அவள் தன்  தோழியை தொலைபேசியில் அழைத்து - 
" என் பெற்றோர் வீட்டில் இல்லை. திரும்பி வர நேரம் ஆகும். நீ வேகமாகப் போய்  என் காதலனை 
என் வீட்டுக்கு உடனே வரச்  சொல். வந்தால் நாங்கள் இருவரும் சற்று "ஜாலியாக" இருக்கலாம் " 
என்று கூறுகிறாள்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

'என்ன பெண் இவள்? காலம் கெட்டுப் போச்சு! என்ன இருந்தாலும் அந்த காலப் பெண்களுடைய 
அடக்கம் இந்தக் காலத்துப் பெண்களுக்கு இல்லவே இல்லை! " என்றுதானே?

"அந்தக் " காலப் பெண்கள் என்ன செய்தார்கள் என்று சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போமா-
இந்த குறுந்தொகைப் பாடல் வழியே?

குறுந்தொகைப் பாடல் 279

சேயாறு சென்று, துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,
வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,
பனியிரும் பரப்பில் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே.

என்ன புரியவில்லையா?

இதன் பொருள் :

நெடுவழியில் சென்று சென்ற வேகத்தில் இந்தப் பொருத்தமான நேரம் பற்றி அவருக்கு யாராவது சொன்னால் நல்லது.

சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம்.

அந்தக் காலப் பெண்கள் நல்ல " விவரமானவர்கள்" தான்!

இதையே நான் ஒரு சிறு கவிதையாக இதோ தருகிறேன் - !ஒரு வெண்டுறை வடிவில் !

படகேறிச் சென்றுளான்   என்தந்தை  ;  தாயும் 
கடைவீதி சென்றாளே   தோழி - உடனே  
வரச்சொல்லென் காதலனை விரைந்து ; அவன்வரினே  
பெறலாம் இனிதாய் எனை!

இதே பாடல் ஒரு லிமெரிக் (limerick )* வடிவத்தில் :

என் பெற்றோர்கள்   போனார்   வெகுதூரம்  
அவங்க  திரும்பிவர ஆகும் ரொம்ப நேரம்  
என் காதலனை நானும் 
பார்த்துப் பேச வேணும் -  
அவன் வந்தாதான் அடங்கும் எந்தன்  தாகம் 

இந்தக் கருதோடு ஒரு சினிமாப்  பாடல் கூட இருப்பதாக நினைவு ! 
ஞாபகம் வரவில்லை!
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு : இதற்கு முன்னே, "ஊதா கலர் ரிப்ப" னோடு   இணைந்த ஒரு நற்றிணைப்  பாடல் பற்றி
எழுதியிருந்த பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம்!
https://kanithottam.blogspot.com/2016/12/blog-post.html

Update :
 இந்தப் பதிவைப் படித்த நண்பர் வரதராஜன் ,  இதே கருத்தோடு எழுப்பட்டிருந்த 
சினிமாப்  பாடலை நினைவு படுத்தினார் - " மம்மி டாடி வீட்டில் இல்லை " என்ற பாடல் .
இதைப் படித்தல் இந்தக் காலப் பெண்கள் ஒரு படி என்று தோன்றுகிறது!
இதோ அந்தப் பாடல் :
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்... கேளேண்டா மாமூ... இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி... டாடி மம்மி...
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா


2 comments: