Search This Blog

Dec 2, 2016

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?
சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்.

ரோஜா கலரு பொம்மி, யார் உங்க மம்மி?
சொல்லடி அவளுக்கு நான் சபாஷ் சொல்லணும் 
 
மேலுள்ள  வரிகளுடன் கூடிய திரைப்பாடல் , சில நாட்களுக்குமுன் மிகப் பிரபலமாக இருந்தது. கிடைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய எண்ணம் - " சே, என்ன ஒரு ரௌடித்தனமாக இருக்கிறது? திரைப் படைப்பு பாடல்களின் தரம் இப்படிக்கு குறைந்து போய்விட்டதே ! " என்பதுதான். (இதைவிட மோசமான பாடல்களும் இருக்கின்றன என்பதும் உண்மைதான்).
 
இதைக் கேட்ட சில நாட்களுக்குப் பின் சென்னை அண்ணா நூற்றாண்டு புத்தக நிலையத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கும் போது ,சங்க கால இலக்கியமான நற்றிணை -யைப் படிக்க நேர்ந்தது.
 
என்ன ஆச்சரியம்.! நற்றிணையில் ஒரு பாடல் , ஊதா கலர் ரிப்பன் பாட்டுக்கு முன்னோடியாக இருக்கக் கண்டேன். பழந் தமிழ்ப் பாடல்களின் கருத்து , வரிகள் இவைகளை பின்பற்றி பல திரைப்படப் பாடல்கள் இதற்க்கு முன்னே வந்திருந்தாலும் , இது எனக்கு பெருத்த  வியப்பையே அளித்தது. 
 
என்ன சொல்ல? அந்த காலத்திலேயே நம்ப பசங்க தேறிட்டாங்க என்றா? 
 
ஆனாலும் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும். கருத்து அதேதான் என்றாலும் , சொல்லப்பட்டிருந்த  விதமும், நயமும் வியக்கத்தான் வைக்கிறது!
 
அந்தப் பாடல் இதோ! படித்து மகிழுங்கள்!
 
அன்புடன்

ரமேஷ்
 
அழகுபட குழந்தை அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோன்
யார் மகள் கொல் ? இவள் தந்தை வாழியர் !
துயரம் உறீஇனள் எம்மே: அகல் வயல்
 
செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையும், பல்வகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்தவளும், நீல மணியொத்த மேனியளு மான இவ்விளம்பெண், அசையாத உள்ளம் உள்ள என்னையே அவளை எண்ணித் துயருரைச் செய்தாளே !
இவளைப்  பெற்று எனக்கு உதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க !

அரிவளர் அரிந்தும் , தருவளர்ப் பெற்றும்
தன்சேறு தாஅய் மதனுடை நோன்தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே!


இவளை ஈன்ற தாயும் திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டிநகர் போன்ற சிறப்பைப் பெறுவாளாக!

("அறிவளர்" என்று தொடங்கி, "பூக்கும்" என்று முதல் மூன்று வரிகளின் மொழிபெயர்ப்பு இங்கு தரப்படவில்லை.)

No comments:

Post a Comment