Search This Blog

Dec 3, 2016

ஈசாவாஸ்ய உபநிஷத் - 1 & 2


ஈசாவாஸ்ய உபநிஷத் - ஸ்லோகங்கள் 1 & 2

இந்தப் பதிவில் ஈசாவாஸ்ய உபநிஷத் தின் முதல் இரண்டு ஸ்லோகங்களையும்  , அவற்றின் பொருளையும் ( ராமகிருஷ்ணா மடத்தின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது )  காணலாம். 
அதைத் தொடர்ந்து , அந்தக் கருத்தை ஒரு பாடலாக -- என்னால் கூடிய மட்டும் மேற்குறிப்பிட்ட மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிதையாமல்-- வடித்திருக்கிறேன்.  
அன்புடன் 
ரமேஷ் 
updated with English translation on 5/12/2016






பொருள் *

மாறுகின்ற தன்மையுள்ள இந்த உலகத்தில் உள்ள அத்தனையும் இறைவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது. அதனால், தியாக சிந்தனையுடன் , உலகை அனுபவி. யாருடைய பொருளையும் அபகரிக்க இச்சை கொள்ளாதே!

English Translation **
The Lord is enshrined in the hearts of all.
The Lord is the Supreme reality.
Rejoice in him through renunciation.
Covet nothing. All belongs to the Lord.

* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books


பாடல் 

மாறுமிவ்  வுலகில் காணுமெப் பொருளும்
----------இறைவனின் மறு உருவே- அதனால்
பாரிடை வாழ்க்கையில் பார்த்திடு மனைத்திலும்
----------பரமனைப்  பார்த்து விடு
சீரும் சிறப்பும் செல்வமும் இவைபிற
----------அனைத்தும் நிலை யிலவே - இம்
மாறா உண்மையை மனதினில் இருத்தி
----------வாழ்க்கையை வழி நடத்து.





பொருள் *

இவ்வுலகில் கடமைகளைச் செய்து கொண்டுதான் நூறு ஆண்டுகள் வாழ விரும்பவேண்டும். இப்படி , உலகை அனுபவித்து வாழ விரும்பும் மனிதனாகிய உனக்கு, கடமைகளை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு வாழ்வதால் , கடமைகளின் விளைவுகள் உன்னைப் பற்றுவதில்லை.

English translation :**
Thus working , you may live a hundred years.
Thus alone will you work in real freedom

பாடல் 

மானிடப் பிறவி எடுத்தவர்க் கெல்லாம்
----------கடமைகள் சேர்ந் திடுமே
நான் எனதென்ற நினைவினை அகற்றி
----------கடமையை ஆற்றி விடு
ஆண்டவன் செயலே அனைத்து மென்றுணர்ந்து
----------பற்றறப் பணி  செய்து
ஆண்டுகள் நூறு வாழ்ந்திடின் செய்கையின்
----------விளை வுனைச் சேராதே .


* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books

1 comment:

  1. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.
    அரசு ஆணையை நிறைவேற்றத் தூக்கிலிடுபவன் ஐயோ பாவம் சேருமே என்று பதைத்தால் ஆணையை நிறைவேற்றுவது ஆர்?
    PRN

    ReplyDelete