Search This Blog

Feb 27, 2020

எது கவிதை?

எது கவிதை?

எதுகையும் மோனையும் ,  பிற இலக்கண லட்சணங்களும் இருப்பதுதான் கவிதையா?
இது பற்றி நான் எழுதி என் கல்லூரி நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட ஒரு பாடல்.

அன்புடன் 
ரமேஷ் 
 


எது கவிதை? யார் கவிஞர்?

பதுங்கிப் பலநாள் மனதின் உள்ளே புதைந்த கருத்துக்கள்
மிதந்து வெளியே வார்த்தை வடிவில் வருவது கவியாகும்.

எதுகைமோனை தளை கள் இவைகள் இருக்கும் சிலவற்றில்.
அதுஇல்லாமல் தளைகளை உடைத்து எழுவதும் கவிதைதான்.

படிப்போருக்கு படைப்பவன் கருத்து போயடையும் வரையில்
துடிக்கும் சொற்கள் கருத்துகளுக்கு உயிரூட்டும் வகையில் 

வடிக்கும் எல்லாப் படைப்பு களுமே கவிதை வடிவம்தான்.
அடித்துச் சொல்வேன் அப்படி எழுதும் அனைவரும் கவிஞர்களே.

அன்புடன் 

ரமேஷ் 

2 comments:

  1. Liberal view . Encouraging every one to write Kavithai

    ReplyDelete
  2. Yes. Content is more important than form! But of course, the presentation should be suitably embellished. Otherwise it will become prose.

    ReplyDelete