வயதானவர்களுக்கும் வேலன்டைன் (அல்லது) தயங்காமல் காதல் செய்வீர்.
இன்று வேலன்டைன் நாள்.
இன்று வேலன்டைன் நாள்.
இந்த நாளுடைய நிஜ தாத்பரியம் என்னவாக இருந்தாலும் , இப்போது அது இளம் வயதினர் தங்களுடைய காதலை வெளிப்படுத்திக்கொள்ளும் அல்லது அதற்கு அஸ்திவாரம் போடும் ஒரு நாளாக ஆகிவிட்டுருக்கிறது.
இந்த லவ்வையும் ரொமான்சையும் வயதானவர்கள் மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?
இந்தக் கருத்தை உட்கொண்டு ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
வேலன்டைன் கொண்டாட் டங்கள்
வாலிபர் களுக்குத் தானா?
வயதானோர்க் கில்லை யென்ற
நியதிகள் எதுவும உண்டோ??
காதலை முதலில் செய்து
சாதிகள் சேரா ததனால்
பாதியில் அதனை விட்டு
மீதிக்கு மாறு வோரும்
டைம்பாஸ் மட்டும் செய்ய
கேர்ள்பிரெண் டோடு தினமும்
கடற்கரை மணலில் அமர்ந்து
கடலையைப் போடு வோரும்
ஆசையாய் சிலநாள் மட்டும்
அன்பைப் பரிமாறிப் பின்னால்
பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் மாற்றி
சிங்கிள்எனச் சொல்லும் சிலரும்
ஒருவருக் கொருவர் இன்று
வேலன்டைன் கொடுக்கும் போது
திருமணம் முதலில் செய்தும்
காதலைப் பின்பே செய்தும்
கருத்துக்கள் முழுதும் ஒத்துப்
போகவே இல்லை எனினும்
புரிதலுடன் ஒருவர்க்கொருவர்
விட்டுக் கொடுத்து வாழும்
நரைமயிர் தம்பதிகளுமே
வெட்கத்தை விட்டு இன்று
வருடத்திற் கொருநா ளேனும்
வேலன்டைன் அளித்துக் கொள்வீர்*.
வேலன்டைன் கொண்டாட் டங்கள்
வாலிபர்க்கு மட்டும் இல்லை
வயதாகிப் போனால் என்ன?
தயங்காமல் காதல் செய்வீர்.
Dear Ramesh,
ReplyDeleteGreat thoughts, well written - as usual. Thanks for the direct forward.
Regards
SUNDER
Dear Ramesh,
ReplyDeleteThis is yet another poem in colloquial Tamil which anyone can understand.
This is a special skill you possess to capture modern audience .
Ramani.
Thanks, Ramani. You are right! Most people like poems in colloquial tamil than the classical versions.
DeleteBut don't stop writing in classical Tamizh also - it has its own charm.
ReplyDeleteதாத்பரியம் என்றால் என்னவோ! கோ. ரா
ReplyDeleteஉட்பொருள். குறிக்கோள் !
DeleteExcellent . Your advise for elder couples is Welcome suggestion. Hope All our age group will appreciate & follow . Keep posting your Thoughts
ReplyDeleteகாதலுக்குக் கண் இல்லை என்பது வழக்கில் இருக்கும் இன் சொல் ஆகும். இப்போது வயது ஒரு தடை இல்லை என்று அறிகிறோம் கவிஞர் ரமேஷ் அவர்களின் கவிதைத் தேன் துளிகளிலிருந்து.
ReplyDeleteவிருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்பது வழக்கம். அன்புக்கும் (காதலும்) அளவு உண்டு தானே
Thayankamal nalla kadal seiveer...
ReplyDeleteInteresting thought !
ReplyDeleteVery nice. Will follow 👍
ReplyDelete