Search This Blog

Oct 25, 2017

மீண்டும் பிறக்கிறான் நரகாசுரன்

மீண்டும் பிறக்கிறான் ---- 
நரகாசுரன்

அன்று

மூவுலகங்களையும்   தன் காலடிக்கீழ் கொண்டுவந்து
மக்களை வதைத்து
கொடுங்கோலாட்சி செய்த
நரகாசுரனை
அழித்தான் கண்ணன்.

அவன் அழிவைக்  கொண்டாடினர்  மக்கள்.

பிறந்தது தீபாவளி.


இன்று

தீபாவளிக்  கொண்டாட்டத்தில்
வெடிக்கும்  பட்டாசுகள் வெளிவிடும்
விஷப்புகையின்   உருவத்தில்
விஸ்வரூபம் எடுத்து
மக்களை மெள்ள மெள்ள அழிப்பதற்கு

மீண்டும் பிறக்கிறான்
நரகாசுரன்

அவனை அழிக்க
என்று வருவான்
கலியுகக் கண்ணன்?

காத்திருக்கிறோம்.





No comments:

Post a Comment