Search This Blog

Oct 14, 2017

கடவுளைத் தேடுதல்

அதிகாலை எழுந்து த்யானம் செய்வது கடவுளை உணரும்  வழி!

அன்புடன்




கடவுளைத் தேடுதல்

பாவுகின்ற பரிதியொளி புவிநிறைக்கு முன்னமே 
ஏவலின்றி  எழுந்தமர்ந்து இங்குமங்கும் மந்திபோல் 
தாவுகின்ற மனதடக்கி ஜீவனோடு ஒன்றிடின் 
கோவில்சென்று கடவுளைநாம் தேடிடவும் வேண்டுமோ?

பாவுகின்ற = பரவுகின்ற
ஏவலின்றி  = தூண்டுதலின்றி, தானாகவே
ஜீவன் = நம் உள்ளிருக்கும் பரமாத்மா 

2 comments: