Search This Blog

Mar 22, 2017

மீண்டும் தாத்தா ஆனேன் நான்!


மீண்டும் தாத்தா ஆனேன் நான்!


பங்குனித் திங்களின் எட்டாம் நாள் *
மங்களச் செவ்வாய்க்  கிழமையிலே

காலை மணிவொன்ப தரையளவில்
மூலத் தாரை முடியுமுன்னே

பெற்றோர் சித்தார்த் நேகாவும்
உற்றார் உறவினர் மனமகிழ
 
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புதிதாய் ஓர் பூ மலர்ந்ததுவே.

அங்கயர்க் கண்ணியின் அருளாலே
தாயும் சேயும் நன்னலமே.   

மூன்றாம் பெயர்த்தி**வருகையினால்
மீண்டும் தாத்தா ஆனேன் நான்!

*மார்ச் 21
** முதல் இருவர் - அதிதி , அனன்யா - என் மூத்த மகன் சந்தீப்- மருமகள் சாந்தியின் குழந்தைகள்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் ரமேஷ்!உங்கள் மகிழ்ச்சி பல்கி பெருகட்டும்.

    ReplyDelete