Search This Blog

Apr 8, 2016

புட்டபர்த்தி- 3


புட்டபர்த்தி-3


புட்டபர்த்தி - தொடர்ச்சி

பிரசாந்தி நிலையத்திற்கு உள்ளே இருக்கும் வணிக வளாகத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது கண்ணைக் கவரும் வான நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிள்ளையார் சிலை !

STANDING VINAYAGAR WITH UMBRELLA



வண்ணக்    குடைதன்னை    தோளிலே    சரித்து
கண்கவர்    பட்டுடை.   தரித்து-   தண்ணீர்  
கமண்டலம்  கையேந்தி    நெடுதுயர்ந்து.   நிற்கும்
உமயவள்    மகனைத்.   துதி!                                                               
 
(வெண்டுறை )


 பஜனைக்குப் பின் , சமாதி தரிசனம் செய்துகொண்டு,
உள்ளிருக்கும் தியான மண்டபம் வழியாக வெள்ளியே செல்லுகையில் , மண்டபதிற்குள்ளே  காட்சி தரும் பளிங்குப் பிள்ளையார் .






வெள்ளி விளக்கிரு மருங்கிலும் ஒளிர
உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடன்

வெள்ளைப் பளிங்கு கல்லில் சமைத்த
பிள்ளையார் பாதம் பணிந்து வணங்கு.                     (கலி விருத்தம்)
 
 
 
 


 

1 comment:

  1. பிள்ளையார் நின்று தரிசனம் கொடுக்கும் நிலை ஒரு அபூர்வ சிலை- மனதில் நின்றவை ! பகிர்த்து கொண்டதிற்கு இன்று ஆரம்பித்த துர்முகி வருடம் முழுவதும் உமக்கு மகிழ்ச்சி பெருகட்டும்!

    அன்புள்ள
    வெங்கட்

    ReplyDelete