Search This Blog

Apr 6, 2016

புட்டபர்த்தி - 2

புட்டபர்த்தி ---- ( தொடர்ச்சி )

முந்தைய "புட்டபர்த்தி -1 " பதிவில்  "கணேசா நுழைவாயில் " பிள்ளையார், அதன் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் ஆகியோரைப் பற்றிய பாடல்களைப் பதிவு செய்திருந்தேன்.

இந்த முறை கோபுர வாசல் முன் வீற்றிருக்கும் ,  உலோக   வார்ப்படத்தால் ஆன வினாயகர் , அதற்குப் பின்னிருக்கும்  "ராம லக்ஷ்மண சீதா " சிலை ,  அதன்  கீழே  அமர்ந்திருக்கும்  அனுமன் சிலை ஆகியவற்றைப் பற்றிய பாடல்கள்.

அன்புடன்

ரமேஷ்

விரித்த மடலழகும் வேழமுகத் தழகும்
சிரிக்கும் சிறுத்த கண்ணழகும் - பெருத்த
தொந்தியுடன் வார்த்த சிலையழகும் கண்டு
வந்திப்போம் வாயில்நுழை வில்.

 
இலக்கென்றும் தவறாத வில்லம்பை ஏந்தி

இலங்கைவாழ் அரக்கரை அழித்திட்ட அண்ணல்
இலக்குமியின் அவதார நிலமகளி  னோடும் 
இலக்குவ னோடும் இணைந்திருக்கும் காட்சி!               
  
HANUMAN UNDER THE RAMA STATUE

தூய சீதை  துயரை நீக்க தூதுவனாய் சென்றவன்

தீயைவைத்து    தீயஅரக்கர்.   நகரத்தையே   எரித்தவன்.

பாய்ந்துசென்று  மலைகொணர்ந்து  அனைவர்நோயைத் தீர்த்தவன்

சாயிகோவில்   வாயில்முன்னே.  ராமர்பாதத்   mதடியிலே

கையில்தாளக்    கட்டெடுத்து.    ராமகானம்    பாடிடும்

வாயுபுத்திரன்   அனுமனை.   வணங்குவோம் !     வணங்குவோம்!

1 comment:

  1. புட்டபர்த்தி பற்றிய இரு கவிதைகளும் அருமை

    ReplyDelete