Search This Blog

Apr 2, 2016

புட்டபர்த்தி- 1

சாயிராம்!

புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையம் ஒரு அமைதிப் பூங்கா..அங்கு உள்ளே நிழந்தவுடன் எல்லோருக்கும் எதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.இல்லாவிட்டால், சாதரணமாக வெளியில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்கள் கூட , உள்ளே ஒரு கட் டுப்பட்டோடு இருப்பதைக் காண முடிகிறது.

பிரசாந்தி நிலையத்திற்குள்ளே பல இடங்களில், சிறு கோவில்களும், தனியாக தெய்வச் சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் அங்கு இருந்தபோது , தினமும் ஒரு சுற்று எல்லாவற்றையும் தரிசனம் செய்து வருவேன்.

அப்போது , ஒவ்வொன்றையும் பற்றி ஒரு சிறு பாடல் வடித்தேன். ஒவ்வொரு பாடலோடும், அந்த உருவச்சிலைகளின் புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். இந்தப் பதிவிலும், இன்னும் சில பதிவுகளிலும், அவற்றைப் பகிர்ந்து கொள்வேன். ஏற்கனவே , பிரசாந்தி நிலையம் சென்றிருப்பவர்களின் நினைவை இப்பாடல்கள் தூண்டி விடும் என்று கருதுகிறேன்.

இந்த முறை, பிரதான வாயிலுக்கு முன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிள்ளையாரைப் பற்றியும், அதற்கு சற்று  அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோவிலப் பற்றியும்..

அன்புடன்
ரமேஷ்.

VINAAYAGAR AT GANESHA GATE



பிரசாந்தி      நிலையத்தின்       நுழைவாசல்    முன்னமர்ந்து
அரசாளும்    ஆனை    முகனை -    சிரம்தாழ்த்தி
பணிந்து    வணங்கிப்பின்    துணிந்திடும்    காரியம்
கனிந்திடும்   இதுஉறுதி   காண்!                                                                                        (வெண்டுறை )


SUBRAMANIYAR

வலக்கையில்    வடிவேலும்    இடக்கையில்    குக்குடமும் *
துலங்கும்    நீர்நிறை     நெற்றியும்  -   சிலம்பணிந்த
பொற்பாத  மும்கொண்ட   பாலனைத்     தொழுதிடுவோர் 
உற்பாதம்    அனைத்தும்    விலகும்.                                                            

(வெண்டுறை )
* குக்குடம் - சேவல்; கையில் இருக்கும் சேவல் கொடியைக் குறிக்கும்.

 

No comments:

Post a Comment