Search This Blog

Feb 27, 2016

திருமகளைக் கொன்றார்.


இந்தியாவில் ஆண் -பெண் விகிதம் நாளாக , நாளாக குறைந்துகொண்டே போகிறது.

பல இந்தியக் குடும்பங்களில்  ---- கிராமம்-நகரம், ஏழை-பணக்காரர் - என்ற பாகுபாடு இன்றி,--- பெண்குழந்தைகளை வதைத்துவிடும் வழக்கம் இருக்கிறது என்பது ஒரு கேவலமான நிகழ்வு.

வசதி படைத்தோரும் , நகரங்களில் வசிப்போரும்,  ( சட்டப்படி தடைசெய்யப்பட்ட ) ஒலிப்படப்பரிசோதனைகள் செய்து , பெண் மகவென அறிந்து கருவைச் சிதைக்கின்றனர்.

கிராமங்களில், பிறந்த பிறகு, கள்ளிப்பால் ஊட்டி வதைக்கிறார்கள்!

சட்டப்படி ஒரு குற்றம் என்று தெரிந்திருந்த போதும், இத்தகைய செயல்கள் செய்யப்பட்டே வருகின்றன .

வரும் மகளைக் கொல்லும்  இவர் , திருமகளையே  அல்லவா கொல்லுகிறார்?

இது பற்றி ஒரு சிறு கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

திருமகளைக் கொன்றார்.
 
வறுமையில்   வாடிய   தம்பதிக   ளிருவர்
திருமகளை   மனமுருகி    தினம்பூசை    செய்தார்.
தனைவேண்டி   துதித்தவர்க்கு   அருள்செய்ய   அவளும்
மனைவியின்    கர்ப்பத்தில்    மகளாக    நுழைந்தாள்.


அவரோ

வரப்போகும்   மகவுஓர்   பெண்ணென்று   கண்டார் !
கருவைக்   கலைத்தார் !   திருமகளைக்    கொன்றார் ! 









 

2 comments: