Search This Blog

Feb 23, 2016

முருகனை "எண்ணு" வோம்.!


திருவிளையாடல் படத்தில் வரும் , கே.பீ.சுந்தராம்பாள் பாடிய, " ஒன்றானவன் ...... " என்று தொடங்கி எண் வரிசைப்படி முருகன் மீது  பாடும் பாட்டு மறக்க முடியாத ஒன்று.

உள்மனதில் அதன் தாக்கமோ என்ன தெரியவில்லை, சென்ற வாரம் காலையில் பூங்காவில் நடந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில வரிகள் , சில நாட்கள் கழித்து , இந்தப் பாடலாக  உருவெடுத்து இருக்கின்றன.

முருகனுக்கும் , உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன்.


அன்புடன்

ரமேஷ்


முருகனை "எண்ணு"வோம்.!

ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே  வானையை            #1*2                  
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்  
ஈரிரண்டு#  நால்வேதத்  துட்பொருளை உணர்ந்தபின்    #2*2
பிரணவத்தை   ஈசர்க்கு  போதித்தவன் 

 
மூவிரண்^  டாறான முறுவல் முகங்களுடன்                  ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^  எண்திக்கும் அரக்கரை  அழித்திடவே       ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

 
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும்      ^5*2                     
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^  பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு    ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
  
ஏழிரண்டு^  பதினான்கு  இரவுகள்  வளர்ந்திட்ட             ^ 7*2     
முழுமதியைப்  பழித்திடும்  வதனத்தினன்.
எட்டிரண்டு^  பதினாறு செல்வமும்  சிறப்புடன்              ^  8*2
கிட்டிடும்   குமரனைத்  துதிப்பவர்க்கே.

சித்தர்க ளீரொன்பதில்^   மூத்தமுனி  அகத்தியர்க்கு         ^ 9*2
முத்திதரும்  மந்திரங்கள்  போதித்தவன்.
பூதங்கள், புலன்,பிராணன் , இந்திரியங்  கள்என்ற            ^ 10*2
பத்திரு  வத்தையும்^   உருவித்தவன்.                    

                          
எண்கணக்கி  லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி 
பண்புனைந்  துன்புகழ்  பாடினேனே!
என்கணக்கு  இப்பிறவி. யில்முடியு  முன்னமே
எனையாண்டு  அருள்புரிவாய்  குமரவேளே!

 
 

2 comments:

  1. உமையாளின் இளைய மகனை நீங்கள் கணித கோணத்தில் நோக்கி புனைந்த பாவின் சிறப்பை எண்ணி எண்ணி வியக்கிறேன் !!

    ReplyDelete
  2. One more beauty from Ramesh! Stay Blessed!

    ReplyDelete