என் கல்லூரி நண்பர் கோவிந்தராஜன் "whatsapp " ல் அனுப்பிய இந்தப் படத்தின்
உந்துதலால் உதித்த ஒரு கவிதை!
அன்புடன்
ரமேஷ்
இதழும் இலையும்
என் கல்லூரி நண்பர் கோவிந்தராஜன் "whatsapp " ல் அனுப்பிய இந்தப் படத்தின்
உந்துதலால் உதித்த ஒரு கவிதை!
அன்புடன்
ரமேஷ்
இதழும் இலையும்
ஒரு ஜனனம் , ஒரு மரணம்
சாதனைகள் படைத்த சாமானி யர்இருவர்
வெற்றிக் கோப்பையுடன் வீடு திரும்புகையில்
இருவரின் கண்களிலும் பெருகிவரும் கண்ணீரே!
காரணமோ வெவ்வேறு! விதியெழுதிய கதையிதுவே!
சின்னப்பன் பட்டியெனும் சிற்றூரிலே பிறந்து
முன்னேறப் போராடி வெற்றிகண்ட நடராசன்
தொண்ணுறு நாட்களுக்கு முன்பிறந்த தன்மகவை
கண்ணார முதல்முறையாய் கண்டு அணைக்கையிலே
கண்ணூறிக் கன்னத்தில் வழிகிறது கண்ணீரே!
ஐதரா பாத்நகரின் ஆட்டோ ஒட்டிமகன்
தாய்நாடு திரும்புகையில் தந்தை உயிரோடில்லை!
விதையிட்டு விளையாட்டு ஆர்வம் வளர்த்தவரை
புதைத்திட்ட இடமடைந்து சதைகுலுங்க அழுகையிலே
கருவிழியில் அருவியெனப் பெருகுவதும் கண்ணீரே!
ஒருவரது கண்ணீரின் பின்னணியில் ஜனனம்!
மற்றவரின் கண்ணீரின் காரணமோ மரணம்!
விதியெழுதிய கதை இதுவே! வேறன்ன கூறுவது?
அன்புடன்
ரமேஷ்
சாதனையும் வேதனையும்
நேற்றைய இரு நிகழ்வுகளில் ஒன்று சாதனை; மற்றொன்று வேதனை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை அதிரடியாக வெற்றி கொண்டது சாதனை.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் சாந்தா இறைவனடி அடைந்த செய்தி வேதனை.
இவைகளைப் பற்றி வெண்பா வடிவில் ஒரு பதிவு.
அன்புடன்
ரமேஷ்
சாதனை
முன்னணி வீரர்கள் ஐவர் ,அடிபட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் இருந்தபோதும், அனுபவமே அற்ற மாற்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியொன்றை அமைத்து , எவரும் கனவிலும் நினைத்திராத முறையில் சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தார்கள்!
அஞ்சுபேர் நோயால் அணியிலில் லாபோதும்
அஞ்சாமல் ஆடியே வென்றார் விளையாட்டில் !
"ஆசி"யரின்* ஆணவத்தை நீக்கி முகத்திலே
பூசினார் நன்றாய் கரி.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
* ஆஸ்திரேலியர்கள் " ஆசீஸ் " என்று சுருக்கி அழைக்கப்படுவர்.
வேதனை
புற்றுநோய் பீடித்து வாடுகின்ற பேர்களுக்கு
சற்றும் ஓய்வின்றி சேவை செய்தவளே!
மற்ற உலகோற்கும் உன்சேவை தேவையென
சென்றாயோ அங்கே விரைந்து ?
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கடலோரக் காட்சி
பல மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்றோம். இதற்கு முக்கிய காரணம் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருக்கும் எங்கள் அன்புப் பேத்தி ஆதிரா! கடற்கரைக்குப் போயே தீரவேண்டும் என்று பிடிவாதம்!
அதிகாலையில் கூட்டம் கூடும் முன்பாக அங்கு கழித்த சில மணி நேரங்கள் சொர்க்கம்தான்!
முகமூடியைக் கழற்றிவிட்டு, சில்லென்ற காற்றின் ஸ்பரிசத்தில் நடக்கும் சுகமே தனி ! கூடவே கைகோர்த்து நடக்க பேத்தியும் இருந்ததால் ஆனந்தம் இரண்டு மடங்கு!
இந்த அனுபவத்தைப் பற்றி ஒரு கவிதை, இதோ!
அன்புடன்
ரமேஷ்
கடலோரக் காட்சி
கடலலைகள் கரை தடவும் ; அலைமுடியில் நுரை மகுடம்;
உடல் தழுவும் குளிர் காற்று; இளம் சூட்டில் கதிர் கீற்று .
முகில் தூவும் சிறுதூறல் ; துகில் நனைக்கும் மழைச் சாரல்;
முகம் சேரும் மழைத் துளிகள் சுகம் சேர்க்கும்; அகம் மகிழும்!
கரையோரம் நிற்கையிலே சிற்றலைகள் கால்வருடும்.
விரைந்துவரும் பேரலைகள் துரத்திநம்மை ஓடவிடும் .
திரும்பிக்கடல் செல்கையிலே காலடியில் குழிபறிக்கும்.
குறுமணலின் உரசலிலே உள்ளங்கால் குறுகுறுக்கும்!
தூரத்துத் தொடுவானச் சூரியனைப் பார்த்தபடி,
இளங்கதிரின் சூட்டினிலே உடல்சிறிது வேர்த்தபடி,
பெயர்த்தியுடன் விரல்களையே கைசேர்த்துக் கோர்த்தபடி,
நடக்கையிலே பார்த்திருக்கும் கடலதையே ஆர்த்தபடி!
ஈரமணல் பரப்பினிலே காலடிகள் தடம்பதிக்கும்
மீண்டும்மீண்டும் கால்வருட வருமலைகள் அடம்பிடிக்கும்.
இவ்வியற்கைக் காட்சியையென் கண்களுமே படம்பிடிக்கும்
என்மனதில் இந்நினைவுகள் நீங்காமல் இடம்பிடிக்கும்!
துளசி தளங்கள் பறித்து எடுத்து தொடுத்த மாலை அதனுடன்