எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்துக்களை மட்டுமே கொலைசெய்து இந்தியாவில் மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும்.
ஜெய் ஹிந்த் !
ரமேஷ்
பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில்
திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக் கொலைசெய்தார்
இந்துக் களைமட்டும் - இந்தச் செயலெதிர்த்து
இந்தியனே பொங்கி எழு !
ஆதார அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்
போதாமல் உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்
மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு
கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை
ஏற்காது எம்பார தம்
பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்
உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே
ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த
பாவிகளைத் தேடிக்கொல் வோம்
You have reflected our thoughts in their entirety - Sunder
ReplyDeleteநமது உள்ள குமுறலுக்கு விரைவில் தீர்வு வரும்.
ReplyDeleteHope our Response will Ensure such Incidents will not Happen again
ReplyDeleteகாலம் வரும்.
ReplyDelete