IPL -2025 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி??!
ஆறாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது :
சேறிலே கால்புதைந்து ஒடத் தவிப்பவனைப் போல்
ஆறிலே ஒன்றை மட்டும் இன்றுவரை வென்றதாலே
மாரிலே சந்தனம்போல் மணக்கின்ற நிலைமை மாறி
ஆர்.ஐ.பி. எழுதும் நிலைமை அய்யகோ வந்ததிங்கே !
ஏழாவது ஆட்டத்தின் வெற்றிக்குப் பின் எழுதியது
கருமேகக் கூட்டத்தின் விளிம்பினொளிக் கீற்றைப்போல்
சரிபாதி ஆட்டங்கள் முடிகின்ற தருவாயில் * * 7 out of 14
பரிதாப நிலைசற்றே மாறியதே ! இனிமேலே
ஒருவேளை பெருவாகை பெறும்வேளை வந்ததுவோ?
எட்டாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது
விழுந்து கிடக்கின்ற சி.ஸ்.கே இனியேனும்
எழுந்து நிற்குமிவ் வெட்டாவது ஆட்டத்தில்
என்ற நினைப்பினிலும் மண்விழுந்து மூடியதே
வென்றதே மும்பை அணி!
இன்று ஒன்பதாம் ஆட்டத்திற்கு முன்பு
பத்தாம் இடத்திலே பசைபோட்டு அசையாமல்
கெத்தாய் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் சி.ஸ்.கே
ஒன்பதாம் இடத்துள்ள காபித்தூள் குழுமத்தை* * sunrisers
இன்றேனும் காட்டுமோ வென்று?
அன்புடனும்,எதிர்பார்ப்புடனும்
ரமேஷ்
அபாரம். கேலிகள் மிகுந்த நகைச்சுவையை ரசித்தேன்
ReplyDeleteMissing your audio clip, especially for this Oppari ! If this trend continues, we have to feel happy they are in the 10th place, since there are only 10 teams, Thank God :-)
ReplyDeleteSimilarly missing your audio clip. CSK is #10 on the table but #1 on the Fair Play table. Maybe this is the meaning of playing "hard (for the fans to watch} but fair".
ReplyDeleteNice one. You could have waited for the match with SRH to finally put the lid on CSK’s coffin.
ReplyDeleteIt's a true oppari 😄 hopefully next year you have to write a poem praising csk performance😄
ReplyDeleteஒன்பதாம் ஆட்டமும் வெல்லவில்லையே. அடுத்த ஆண்டு பார்க்கலாம்.
ReplyDeleteஅருமையான கவிதை. உள்ளத்தில் உள்ள அத்தனை வேதனைகளையும் கொட்டிய உரை.
ReplyDeleteVanja Pugazhi Ani ? Super sir!!!!
ReplyDelete