Search This Blog

Jun 20, 2024

பிரதோஷப் பாடல் - 48

பிரதோஷப் பாடல் - 48

நேற்றைய பிரதோஷ நாளன்று பெங்களூர் குந்தனஹல்லியில் இருக்கும் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டவன் தரிசனம்! அங்கு மனதில் எழுந்த ஒரு பாடல்-  

பிரதோஷ நாதன்  திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்புடன் 

ரமேஷ் 




பிரதோஷப் பாடல் - 48


இமயப் பனிமலை மேலுறையும் இறைவனை

-----துதிக்கின்ற நாமமே ஓம்நமச் சிவாயவே 

அமரரைக் காக்கவே ஆலகா லம்உண்ட  

-----விமலனை வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே

சமகருத் திரமெனும்* மந்திரங்கள் ஓதியே                   * சமகம், ருத்திரம்  சிவனைத் துதிக்கும் மந்திரங்கள்   

-----தினமவன் துதிபாடு வோம்நமச் சிவாயவே  

சமயக் குறவர்கள் நால்வரும்* நாள்தொறும்               *அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்,சம்பந்தர் 

-----நாவுரைத்த மந்திரம் ஓம்நமச் சிவாயவே  

தமருகும் எனும்சிறு முரசினை ஏந்திய

-----நாதனைப் பாடுவோம் ஓம்நமச் சிவாயவே 

உமையவள் நாதனை நான்மறை வேதனை*                * வேதன் = இறைவன்  

-----உருகியே வேண்டுவோம்   ஓம்நமச் சிவாயவே 


6 comments:

  1. மிக மிக அருமையானது.
    நன்றி
    அர.
    இராமச்சந்திர்ன்

    ReplyDelete
  2. அருமை!பக்தி, பரவசம் கூட்டும் கவிதை!சிவன் எப்போதும் மனதில் நின்று, நன்மைகள் புரிந் திட, நாளும் பாடுவோம், நாதனின் பெருமைகளை!

    ReplyDelete
  3. Excellent! Where’s this temple?

    ReplyDelete