Search This Blog

Sep 28, 2023

நீத்தார் கடன்

நாளை முதல் மாளைய பக்ஷம் என்று அறியப்படும் 15 நாட்கள் தொடங்குகிறது. இந்த நாட்கள் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. வெவ்வேறு பிரிவினர் அவரவர்களுடைய முறைப்படி நீத்தார் வழிபாடுகளை செய்வர். எள் நீர் விடுவதும், காகங்களுக்கு உணவு படைப்பதும் பலரது வழக்கம். இது குறித்து இரு சிறு பாடல்கள்.

அன்புடன் 

ரமேஷ்  

நீத்தார் கடன் 





ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 




தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

  



3 comments: