Search This Blog

May 3, 2022

அக்ஷய திருதி

 

இன்று அக்ஷய திருதி. 

இந்த நாளன்று பிறர்க்கு நாம் செய்யும் நற்செயல்கள் பன்மடங்கு பலன் அளிக்கும் என்பது ஐதீகம்.

நாமும் பல நற்செயல்கள் செய்து பலனுறுவோம்.

இது குறித்து இரு சிறு பாடல்கள்- 

அன்புடன்

ரமேஷ்.

பாடல் 1

அட்சய திருதியின்று நம்மில் நலிந்தோர்க்கு 

தட்சிணை* யளித்துதவி செய்தால்  - **யியட்சிணி 

லட்சிமி ஆகியோர் கடைக்கணருட் பார்வை 

நிச்சயம் கிட்டும் நமக்கு

(வெண்டுறை)

*தட்சிணை = நல் உதவி, donation 

** யியட்சிணி= குபேரனின் மனைவி

பாடல் 2

இங்கோடி  அங்கோடி அட்சய திருதியன்று 

தங்கம் வாங்குதல் தவிர்த்து - இங்குள்ள 

ஏழை பாழைகட்கு நாம்செய்யும் உதவிகள் 

ஊழ்ப்பீழை* வெல்லும் வழி.

(வெண்டுறை)

* ஊழ்ப்பீழை= விதியால் விளையும் கேடுகள்

*ஊழ்ப்பீழை=விதியால் விளையும் கேடுகள்






8 comments:

  1. Super sir. Yes this is the day of giving and not buying gold.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your appreciation !

      Delete
  2. மிக அற்புதமான விளக்கம். இல்லாதவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாத உதவி செய்தால் அதுவே போதும் என்பதை நன்கு சொல்லி இருக்கிறாய், நண்பனே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ராம்கி.

      Delete
  3. அங்கத்தை தங்கத்தினால் அலங்கரிக்காமல் அக்ஷை ய த்ரிதியா அன்று மனசை திருத்தி கூழை குடிக்கும் ஏழைகளுக்கு வாரி வழங்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, வெங்கட்!

      Delete
  4. அருமை, உண்மை சார்

    ReplyDelete