Search This Blog

May 3, 2022

ஈத் திருநாள்

இன்று ஈத் திருநாள். 
இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்.

செங்கதிர்ச் சுடரோன்  சூரியன் உதித்து 

வான்வழி உலவும்  பொழுதுகள் முழுதும்

நான்கு வாரங்கள் நன்நோன் பிருந்தபின் 

வான்புகழ் இறைவனை வணங்கித் துதித்து

ஊன்கறி விருந்தினை  உற்றார் உறவுடன்

பாங்காய்ப் பகிர்ந்து களிக்கும்  ஈத்நாளில்

உங்கட்கு உரைப்பேனோர்  வாழ்த்தை. 

4 comments:

  1. Excellent. அம்மாவாசை அப்துல் காதரை வாழ்த்துகிறது. இதுதான் மதநல்லிணக்கதின் இலக்கணம்.

    ReplyDelete
  2. இப்படியும் பாட ஒரு மனது வேண்டும்.

    ReplyDelete
  3. தங்களுடைய அருமையான கவிதை இஸ்லாமிய நண்பர்களை சொற்களால் தழுவி வாழ்த்துகிறது.

    ReplyDelete