Search This Blog

Jan 11, 2022

வீணாய்ப் போன வருடங்கள்

வீணாய்ப் போன வருடங்கள்

2020 , 2021 - இரண்டு ஆண்டுகளும் கொரானா-வுக்கு பயந்தே கழிந்தன.

2022 லும் இந்நிலை தொடரும் போலவே தெரிகிறதே! 

மனித சமுதாயத்திற்கு விடிவு காலம் எப்போது?


வருத்தத்துடன் 

ரமேஷ் 



வீணாய்ப் போன வருடங்கள்


                                                 2020                  2021                  2022


இருபத் திருபதும்* இருபத் தொன்றும்** வீணாய்ப் போன வருடங்கள் *2020 **2021

சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே  திருடப் பட்ட தருணங்கள் 


இன்றோ நாளையோ நீங்கிடும் என்று எதிர்பார்த் திருந்த நாழிகைகள் 

நன்றே நடக்கும் நாளை என்று நம்பிக் கடந்த நாட்துளிகள் 

வானினை நோக்கி வரங்கள் வேண்டி துதித்துக் கழித்த வாரங்கள் 

தீனுண் மியுடைய தாக்கம் தீருமென் றெதிர்பாத்த திருந்த மாதங்கள் 


இருபத் திருபதும் இருபத் தொன்றும் வீணாய்ப் போன வருடங்கள் 

சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே  திருடப் பட்ட தருணங்கள் 



வருடம் இரண்டை வாழ்க்கையி லிருந்து வாரிக் கொடுத்து விட்ட பின்னும் 

பொறுமை காத்துப்  பொறுமை காத்து பல்லுயிர்ப் பெருவிலை தந்தபின்னும்

தூமக் கோளொன்று வானினை விடுத்து பூமியின் மீது விழுந்ததுபோல் 

வாமனக் கிருமி வேறோர் வடிவில் ஓமிக் ரானாய் வருகிறதே! - இதன்  

ரௌத்திரம் சற்றும் குறையா திருந்து வருத்திடும் வருடங்கள்  தொடர்ந்திடுமோ 

சரித்திரம் மீண்டும் இருபத் திரண்டில் மற்றோர் முறையாய்த் திரும்பிடுமோ?




















12 comments:

  1. நல்ல படைப்பு . விரைவில் இந்த கிரிமி தொல்லைக்கு முடிவு வரும்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், விரைவில் இத்தொல்லை நீங்கிவிடும் என்ற நம்பிக்கைக்கும் நன்றி.

      Delete
    2. Sir

      Siblings of Omicron has already announced their arrival, anticipating a refusal poem from you !!! shortly.

      Let us hope for the better tomorrow?.

      Delete
  2. கிருமியினால் இருமி தன்னிலை தடுமாறி எழுதப்பட்ட அருவியை அள்ளி பருகினோம்.
    பள்ளிக்கு செல்லமுடியாமலும் வீட்டிலும் தள்ளி வைத்திறுக்கும் தங்கள் அருமை சிறுமிகளை கண்டு பரிதாபம் கொண்டீரோ.
    என்று தணியும் இந்த கொறானாவின் கொடுமை!

    பின் குறிப்பு:

    ரொவ்த்ரம் என்ற வட மொழிக்கு பதிலாக வீர்யம் என்ற சொல் பொருந்தும் என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் முயன்றால் நீரே ஒரு முழுக் கவிதையை எழுதிவிடலாமே!
      வீரியம் என்ற சொல் மிகப் பொருத்தம்! நன்றி!

      Delete
  3. என்று தணியும் இந்த கொரானா தாக்கம்.
    ரமேஷ், உன் கவிதை மிக அருமை...என் பிதற்றலை பொறுத்துக் கொள்ளவும். தக்க

    ReplyDelete
  4. தக்க*எப்படி வந்தது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. நல்லதொரு கவிதை.இத்தீதுண்மி மீண்டும் உருமாறாமல் ஒழிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆண்டவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அங்கனமே ஆகுக! ஆமென்!

      Delete
  6. Your anguish is very well brought out. Let's pray and hope that the world is back to normal at the earliest!

    ReplyDelete
    Replies
    1. Thanks. The road seeems long and dark as many more mutations are being predicted, Anyway, hope for the best.

      Delete