Search This Blog

Dec 31, 2021

பிரதோஷப் பாடல் - 44

பிரதோஷப் பாடல் - 44



அங்கை தன்னில் கங்கெடுத்து ஆடுகின்ற அம்பலன் 

மங்கை தன்னை இடமிருத்தி பங்களித்த புண்ணியன்    

ஐங்கரற்கு அருள்புரிந்து ஆனை  முகத்தை அளித்தவன்

திங்கள்தன்னை  தலையில் ஏந்தி தக்ஷ சாபம் தீர்த்தவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம்


வெங்கண் வீச்சில் தவம் தடுத்த காமனை எரித்தவன் 

பொங்கும் கங்கை நதியைத் தலையில் தங்கவைத்த தற்பரன்

கங்குல் இரவில் காட்டின்  நடுவில் நடனமாடும் நாயகன் 

இங்கு மங்கும் என்றிலாது  எங்கணும் இருப்பவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம் 



 

1 comment:

  1. ஆஹா அருமை. சிவனின் வரலாற்றை யை தந்து விட்டாய் நண்பா.

    ReplyDelete