Search This Blog

Dec 15, 2021

மார்கழி மாதத்து மாண்பு

 மார்கழி மாதத்து மாண்பு

நாளை  மார்கழி மாதத்தின் முதல் நாள்.

ஒரு வெண்பாப் பாடல் போட்டிக்காக , "மார்கழி மாதத்து மாண்பு" என்ற சொற்றொடரை ஈற்றடியாகக் கொண்டு நான் எழுதிய பாடல் இது! 

அன்புடன்

ரமேஷ்

பி.கு :

சென்ற ஆண்டின் மார்கழியின் போது நான் எழுதிப் பதித்த மற்றோர் பாடலின் இணைப்பையும் இங்கு தந்திருக்கிறேன்.  படித்துப் பாருங்களேன்!

https://kanithottam.blogspot.com/2020/12/blog-post_20.html





வாசலிலே கோலமிட்டு பூசணியின் பூவைத்து
பூசனைகள் செய்கின்ற மாசமிது -- கேசவனின்
பேர்பாடிக் காலையிலே ஊர்கோலம் போகுதலே
மார்கழி மாதத்து மாண்பு

8 comments:

  1. அருமை. பூசணி பூவெல்லாம் இப்போது பாடலில்தான் பார்க்க முடிகிறது!!! 

    ReplyDelete
    Replies
    1. ஆம், உண்மைதான்! 😞 ஆனாலும் இன்னும் பல வீடுகளின் முன்னால் கோலம் போடும் பழக்கம் தொடர்வது சற்று மனநிறைவைத் தருகிறது!

      Delete
  2. Good one. But I am reminded of our school days and Mylapore madaveedi and chuda chuda pongal

    ReplyDelete
  3. மாண்புமிகு ரமேஷ் அவர்களே,

    மார்கழி திங்களன்று காலயில் திருப்பாவயை பூபாளத்தில் பாடுவதும் தமிழ் மரபு. ஆனாலோ தங்களது திருப்பார்வை அந்த சாணியின் மேல் அமர்ந்திருக்கும் பூசணி பூவின் மேல் தான் விழுந்தது. இருந்தாலும் அது ஒரு பாடலாக திகழ்ந்து எங்கள் மனதை கோலாகலமாக ஆக்கிவிட்டது.
    மார்கழி கழிந்து மகர சன்க்ராந்திக்காக கார்திருப்போம்!
    அன்புடன் வெங்கட்

    ReplyDelete
  4. நண்பா
    ரத்தினச் சுருக்கமாக கடுகு சிறுத்தாலும் காரம் போகாமல் மார்கழி மாத பாடலை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete