Search This Blog

Nov 26, 2021

பாட்டொலி நிற்குமுன் ------


பாட்டொலி நிற்குமுன் ------

சில வருடங்களுக்கு முன் நான் "வாட்சப் "பில்  ஒரு  ஆங்கிலக் கவிதையைப் படித்தேன். அந்தப் பதிவு மீண்டும் என் நண்பர் சுதந்திரகுமார் அவர்களால் சென்ற வாரம் பதிக்கப் பட்டது. அந்தக் கவிதையின் தூண்டுதலால் நான் எழுதிய கவிதை இது. இன்றைய உலகில் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது!

அன்புடன் 

ரமேஷ் 










பாட்டொலி நிற்குமுன் ---

ராட்டின மேறி சுற்றும் குழந்தையைப் 

-----பார்த்து மகிழ்ந்தது உண்டா? 

பட்டாம் பூச்சி மேலும் கீழும் 
-
----பறப்பதை ரசித்தது  உண்டா?

கொட்டும்  மழைதரை எட்டும் போதெழும் 

-----ஓசையைக் கேட்டது உண்டா?

மடியும் இரவின் மடியினின் றெழும் 
-
----கதிரைக் கண்டது உண்டா?

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை  நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

நடக்கும் போது கடக்கும் நண்பரைக்

 -----குசலம் கேட்டவர் கூறும் 

விடையைக் கேட்குமுன் விரைந்தே ஓடி

 -----நடையைக் கட்டுதல் உண்டா?

படுத்த பின்னாலும் உறக்கம் தொலைத்து 

     நாளையச் செயல்களைச் செய்யும் 

திட்டம் மனதின் திரையில் நிழலாய் 

     ஓடுவ தென்றும் உண்டா? 

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்ரோடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

உற்ற நட்புடன் உறவுரை யாடிட 

     சிற்சில மணித்துளி நேரம் 

சற்றும் ஒதுக்காது நட்பின் இழைகள் 

     நையச்  செய்வது உண்டா?

உன்மகள் உன்னுடன் ஆடிடச் சற்றே 

     நேரம் கேட்கும் போது 

இன்றிலை நாளை என்றுரைத் தேயவள் 

     புன்னகை தொலைத்தது உண்டா?

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

ஓடியோடி உன் இலக்கை அடைந்தபின் 

     மேலிடும் களைப்பே மிஞ்சும்!

நாடிடும் இலக்கை நீ அடைந்தாலும் 

     மனதில் மகிழ்ச்சிதான் கொஞ்சம்!

ஒவ்வொரு நாளும் சுவைத்து வாழ 

     இறைவன் அளித்த பரிசு!

அவ்விதம் வாழா வாழ்க்கை முழுதும் 

    பாழாய்ப் போகும் தரிசு!

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா!

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!





                   

8 comments:

  1. Very true ..! Needed for today’s generation !

    ReplyDelete
  2. மிக அருமை .

    ReplyDelete
  3. வாழ்வியல்!அறிந்து கடைப்பிடிக்கச் சில உபாயங்கள்! அருமை!படித்ததோடு,பழக்கத்தில்வந்தால் பயன் பெறலாமே!

    ReplyDelete
  4. No words are sufficient to appreciate this great creation of yours. How true is the substance. Please keep us entertained with such poetries.
    Sunder

    ReplyDelete
  5. Very true Ramesh. Beautifully expressed.
    Enjoy life with the bountiful nature .

    ReplyDelete