Search This Blog

Jun 10, 2021

ஒன்றிலே பத்து!

ஒன்றிலே பத்து!

தென்னாப்பிரிக்கப் பெண்ணொருத்தி ஒரே பிரசவத்தில் பத்துக் குழந்தகளைப் பெற்றெடுத்தது இன்றைய செய்தி!

அவற்றில் ஏழு ஆண்கள், மூன்று பெண்கள்!

தாயும், குழந்தைகளும் நலனோடு நீண்டு வாழ இறைவனை வேண்டுவோம்- ஒரு வெண்பா வடிவில் !

அன்புடன்

ரமேஷ்

பி.கு:

ஆங்கிலத்தில் இது DECOUPLET என்று கூறப்படுகிறது. தமிழில் என்ன என்று 
தெரியவில்லை. அறிந்தவர்கள் பகிரவும்! நன்றி!







பத்து மதிக்காலம் காத்துக் குழந்தைகளை  

பெற்றெடுப்ப தொன்றும் புதிதல்ல- வேயாயின்

பத்துக் குழந்தைகளை ஆணேழு பெண்மூன்றாய்

கொத்தாகப் பெற்றவர்க்கு வாழ்த்து 

                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 

18 comments:

  1. Great record. They can start a play school.

    ReplyDelete
  2. எத்தனை குழந்தைகள் என்று
    குத்துமதிப்பாக கூட கணக்கீடு செய்யமுடியாமல் திணறிய
    ஆத்துகாரறை பார்த்து இது
    போதாதோ என்று கோபத்துடன் வினாவிணாளாம் பெத்தாதாய்!

    ReplyDelete
  3. அன்புடன் வெங்கட்

    ReplyDelete
  4. Great news. But very difficult to nourish and grow. God bless them

    ReplyDelete
    Replies
    1. Yes. The parents must be having a terrible time. May god give them the wherewithal -physical and financial-to deal with the situation!

      Delete
  5. வெண்பாவைக்கேட்டால் இன்னொன்று பிறக்குமோ, என்னவோ! ஜி.ஆர்

    ReplyDelete
    Replies
    1. ஏன், பத்தே பத்தாதோ?

      Delete
    2. பத்தும் பத்தும்! ஜி.ஆர்

      Delete
  6. அழகான வெண்பா,ரமேஷ்.👏👏👌👌

    ReplyDelete
  7. பத்துக் குழந்தைகளை ஆணேழு பெண்மூன்றாய்
    கொத்தாக பெற்றவருக்கு வாழ்த்து.
    இது குறள் வெண்பா...காப்பி அடிக்கப் பட்டது.
    ராம்கி
    முழுப் பாடலும் அருமை, ரமேஷ்.

    ReplyDelete
    Replies
    1. காப்பி? புரியவில்லையே?

      Delete
  8. ரமேஷ்
    நானொரு முட்டாள்.
    உன்னுடைய வெண்பாவிலிருந்து நான் குறள் வெண்பா என்று எடுத்து கையாண்டேன்.அதையே காப்பி அடித்தது என்று குறிப்பிட்டேன். ஆனால் இது தவறாக புரிந்து கொள்ளப் படலாம்.
    மன்னிக்கவும்.
    நான் தான் காப்பியடித்தேன்.
    மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.
    ராம்கி

    ReplyDelete
    Replies
    1. விளக்கியதற்கு நன்றி, ராம்கி! 👍 👍

      Delete
  9. நானொரு முட்டாளுங்க!

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா படிச்சவரு unknown சொன்னாருங்க...

    ReplyDelete
  11. இப்படியும் ஒரு பொய், பித்தலாட்டமா?
    வெண்பா வெல்லாம் வெறுமையாகிவிட்டதே! GR

    ReplyDelete