Search This Blog

Jul 20, 2020

மனதின் கழிவுகள்


நம் உடலின் அவயவங்கள்,நாம் சுவாசிக்கும் காற்றிலும், உண்ணும் உணவிலும் உள்ள சத்தை  மட்டும் எடுத்துக்கொண்டு கழிவை வெளியேற்றிவிடுவது போல், நம் மனமும் நல்ல எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டு , கெட்ட எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டால்  எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஏன் இறைவன் அப்படிச் செய்யவில்லை?

அன்புடன் 

ரமேஷ் 


உள்ளி ழுக்கும் காற்றி லும் 
-----உண்ணு கின்ற உணவிலும்
உள்ள நல்ல சத்தையே 
-----மட்டு மேற்று கழிவினை
தள்ளு கின்ற வித்தையை 
-----உடலின் உள்ளே  வைத்தவன்,
உள்ளம் என்னும் ஊற்றிலே 
-----கொப் பளித் தெழுந்திடும்
கள்ள எண்ணக் களைகளை 
-----களைந் தெடுத் தெறிந்துபின்
நல்ல எண்ணம் மட்டுமே 
-----நிலைத்து நிற்க வைத்திடும்
வல்லிய தோர் சக்தியை 
-----உள்ளிருத்த  விடுத்த தேன்? 

உண்மை பொய்மை  இடையிலும் 
-----நன்மை தீமை இடையிலும்
உண்டு செய்து சண்டையை  
-----கண்டு  அதனை ரசிக்கவோ?

நுண்மை யாக எண்ணினால்  
-----என்ன வென்று தெரிந்திடும் ;
ண்  குணத்தான் எண்ணமும்
-----நன்கு நமக்குப்  புரிந்திடும்.

உடலம்  எனும்  பருப்பொருள் 
-----தனிற் படியு மழுக்கினை 
துடைக்க  உதவும் கருவிகள் 
-----தந்த அந்த ஆண்டவன்
உள்ளம் எனும் கருப்பொருள் 
----மேற்  படர்ந்த மாசினை 
விலக்க வேண்டும்  வழிகளை 
-----உனையே  தேடச் சொல்கிறான்!





6 comments:

  1. The internal organs of the body is controlled by brain with no interference from the mind. All the external ஐம் புலன்களும் controlled by mind. If you leave it to Brain then the brain has to be cleansed to get சித்த புத்தி. That's why our religious leaders ask us to follow sanathana Dharma by reading Vedic Scriptures.

    ReplyDelete
  2. நல்ல கவிதை . மாசினை விலக்கு நாம் தான் முயலவேண்டும் . நன்றி

    ReplyDelete
  3. Really it’s a pertinent question. One who’s able to get rid of bad thoughts becomes. a Jnani. This is what each one of us should aspire for.

    ReplyDelete